இந்தியா செய்தி

காதலியின் தந்தைக்கு பயந்து ஓடிய இளைஞர் உயிரிழப்பு

காதலியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நபர் பற்றிய செய்தி இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள போரபண்டாவில் நடந்த இந்த சம்பவத்தில் 20 வயது சோயப் உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் தனது காதலியின் இடத்திற்குச் சென்ற அவர், அவருடன் பீட்சா சாப்பிட்டு பொழுதைக் கழித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது காதலியின் தந்தை படிக்கட்டு ஏறி வரும் சத்தம் கேட்டு, உடனே பீதியடைந்து கட்டிடத்தின் மேற்கூரையின் விளிம்பிற்கு ஓடி, சில தொங்கும் ஆதரவில் இருந்து கீழே இறங்க முயன்றார்.

அவர் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content