ஐரோப்பா

பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் மெற்றோ நிலையத்தில் வைத்து பயணி ஒருவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது.

அதனை திருடி சென்ற திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள La Motte-Picquet-Grenelle மெற்றோ நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இரவு 9 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவரை திடீரென சுற்றிவளைத்த குழு ஒன்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை கொள்ளையிட்டுச் சென்றனர்.

மிக விரைவாக கொள்ளையர்கள் மெற்றோ நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

120,000 யூரோக்கள் மதிப்புள்ள Jaeger-LeCoultre நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்றே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்