ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

சிங்கப்பூரில் குற்றவாளிகள் குற்றத்தை முன்கூட்டியே ஒப்புக்கொண்டால் அத்தகையோருக்கான தண்டனை 30 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குரிய ஆலோசனைக் குழு முன்வைத்த வழிகாட்டிகளில் அதுவும் ஒன்றாகும்.

வழக்குகளுக்கும் சீக்கிரமாகத் தீர்வுகாணப்பட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கான தண்டனைகள் குறைக்கப்படுகின்றன.

ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டிகள் இப்போதிருக்கும் நடைமுறையை இன்னும் தெளிவாக்குகிறது.

குற்றவாளி ஒருவர் எப்போது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துத் தண்டனையை எந்த அளவு குறைக்கமுடியும் என்பதை வழிகாட்டி எடுத்துக்கூறுகிறது.

எனினும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை.

அவர் தரப்பில் விசாரிக்கப்படுவதற்கு அனுமதி பெறலாம்.

சிங்கப்பூர்ச் சட்டத்தின்கீழ் தண்டனைகளைக் குறைந்தபட்ச அளவுக்குக்கீழ் குறைக்க முடியாது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்