ஆசியா

கொரோனாவை விடவும் கொடூர வைரஸ் – உலகிற்கு ஆபத்து – எச்சரிக்கும் சீன விஞ்ஞானி

எதிர்காலத்தில், கொரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் அபாயமிருப்பதாக சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் பற்றிய ஆய்வின் மூலம் புகழ்பெற்றவர் ஷி ஸெங்லி, ஆங்கில திரைப்படத்தின் பேட் உமன் என்ற பெயரால் இவர் அறியப்படுகிறார்.

ஒட்டுமொத்த உலகமும், கொரோனாவை விட அதிக அபாயம் நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்தின், உருவெடுக்கும் தோற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இவர் உள்ளார். இவர் கரோன தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

இவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவிருப்பதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டவை மிகவும் அபாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் ககொரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பயங்கர நிகழ்வுகள் தாக்கக் கூடும் என்றும் உலகத்தை இந்த ஆய்வுக் கட்டுரை எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் வைரஸ்கள், மக்கள் தொகை, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வுகளுக்காக, வூஹான் ஆய்வுக்கூடம், மிக மோசமான வைரஸ்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதாகவும், அமெரிக்கா அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஃபெடரல் அமைப்பு திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்