ஐரோப்பா

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் – காசாவை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல்  மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் மூ  குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசா நகரின் மேற்கில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிறைந்த பகுதியான கதிபா அருகே, இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இஸ்ரேல் குறைந்தது 12 ஏவுகணைகளை வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அசாதாரணமான கடுமையான குண்டுவீச்சில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம் இரண்டு வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்