இராஜதந்திர விரிசல்களுக்கு மத்தியில் பிரித்தானியாவிற்கான புதிய தூதரை நியமிக்கும் ரஷ்யா
பிரித்தானியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்ற போதிலும் உரிய நேரத்தில் புதிய தூதரை அறிவிப்பதாக மொஸ்கோ கூறியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த ஆண்ட்ரி கெலின், கடந்த ஜுலை மாதம் பிரித்தானியாவில் இருந்து வெளியேறினார்.
உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக லண்டன் இருப்பதால், இருநாட்டு உறவுகள் மோசமடைந்து வருகின்றன.
பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக பிரித்தானியா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன் பிரித்தானியாவின் முக்கியநகரங்கள் ரஷ்யாவின் தாக்குதல் பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.




