இலங்கை

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக சட்டமூலத்தில் திருத்தம்

  • June 28, 2026
  • 0 Comments

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் குற்றவாளிக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவை தொழிலாளர் துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்புடைய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  பொது அல்லது தனியார் தொழில் நிறுவனத்தில் குழந்தையை வேலைக்கு அமர்த்தியதாக விசாரணைக்குப் பிறகு ஒருவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் ஒரு லட்சம் ரூபாய் […]

உலகம்

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை  கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் […]

ஐரோப்பா செய்தி

வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் […]

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. உலகம் செய்தி

‘சுதந்திர பாலஸ்தீனம் மலராது’- இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

  • June 28, 2026
  • 0 Comments

சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதற்கான வாய்ப்புகளைத் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். வரும் தேர்தல்களில் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறு வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரண்டு தனித்தனி நாடுகள் அமைய இடமில்லை என்று அவர் அறிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. இஸ்ரேல் மக்கள் இது விடயத்தில் […]

இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

  • June 28, 2026
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி,  தற்போதைய இறப்பு விகிதம் 0.06% ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 51,049 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது அந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரித்திருப்பதைக் இந்த தரவுகள் காட்டுகின்றன. மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய […]

ஜூலை 1 அன்று அட்லாண்டாவில் நடைபெறவுள்ள Round of 32 சுற்றில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர். செய்தி விளையாட்டு

காங்கோ அணி அசத்தல் ஆட்டம்: ஜுலை 1 இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

  • June 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ DR Congo அணி பரபரப்பான மீள்வருகையை (Comeback) நிகழ்த்தி, முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. Yoane Wissa அடித்த 2 கோல்கள் மற்றும் Fiston Mayele அடித்த 1 கோல் ஆகியவற்றின் உதவியுடன், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் காங்கோ வீழ்த்தியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த போதிலும், உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள உஸ்பெகிஸ்தான் […]

உலகம்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிப்பு

  • June 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில்  கனமழையால்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களைச் சென்றடைய தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக மாகாண ஆளுனர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் ஏற்கனவே உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்த அவர், இறப்பு தொடர்பான சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றார்.    

இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமனில் (0-0) முடிந்தது. செய்தி விளையாட்டு

36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு

  • June 28, 2026
  • 0 Comments

மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமநிலையில்  (0-0) முடிந்தது. ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ DR அணிகளைத் தோற்கடித்திருந்த கொலம்பியா, இந்தப் புள்ளியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு […]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன் அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

  • June 28, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ நாட்டில் சட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் பின்னடிக்கவில்லை. சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். அவர் உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. ஏனெனில் உடல் பலவீனமடைந்தால் வழக்கு விசாரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல […]

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. உலகம் செய்தி

வெனிசுலாவில் 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியதை […]