உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க விமான நிலையத்திற்கு வெடிகுண்டுடன் வந்த நபரால் பரபரப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சாக்ரமெண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்சன் என்றும் அறியப்படும் கிமானி ஒசயாண்டே ஜோன்ஸ் (Kimani Osayande Jones) என்ற நபர் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. 49 வயதான ஜோன்ஸ், லேடெக்ஸ் கையுறைகள் மற்றும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்திருந்ததாகவும், அவரிடமிருந்து ஒரு டார்ச் லைட்டர், ஒரு கத்தி, ஜிப் டைஸ் மற்றும் ஐந்து […]

உலகம் முக்கிய செய்திகள்

IT முகவர்கள் போல் வேஷம் : இணைய பாதுகாப்பு குறித்து FBI எச்சரிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஃபெடரல் புலனாய்வுப் பணியகம் (FBI) இணைய தாக்குதல்கள் குறித்து எச்சரித்துள்ளது. கணினி அமைப்புகளை நேரடியாக அணுகுவதற்காக, இணையக் குற்றவாளிகள் தகவல் தொழில்நுட்ப (IT) ஆதரவுப் பணியாளர்கள் போல் நடித்து மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. சைலன்ட் ரேன்சம் குரூப் (SRG) என அறியப்படும் ஒரு ஹேக்கிங் குழு, அமெரிக்க அலுவலகங்களுக்குள் நுழைந்து, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் போல் நடித்து, தீங்கிழைக்கும் மென்பொருளை (malware) நிறுவி, மோசடிகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் FBI தெரிவித்துள்ளது. 2022 முதல் செயல்பட்டு வரும் […]

ஐரோப்பா

பிரித்தானிய பாடசாலையொன்றில் 09 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம்ஷையரில் (Nottinghamshire) உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் உள்ள  மரம் ஒன்றின் விதைகளை உட்கொண்டதைத் தொடர்ந்து 09 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குறித்த மாணவர்கள் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாளான இன்றைய (4) பணிகளின்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் மூன்று கட்டங்களிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 279 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், எலும்புக்கூடு இலக்கங்கள் 266 மற்றும் 261 ஆகியவற்றுடன் தொடர்புடைய மனித எச்சக் குவியலில் இன்று (4) புதிதாக இலக்கம் இடப்பட்ட 274ஆம் எலும்புக்கூட்டுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. […]

ஐரோப்பா

அதிக நன்கொடைகளை ஈர்த்த ரிஃபார்ம் யுகே கட்சி! தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு!

  • June 4, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் காலாண்டில்,  ரிஃபார்ம் யுகே கட்சி அரசியல் நன்கொடைகளை  ஈர்த்து முதலிடம் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு இதுவரை  9 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த கிரிப்டோ பில்லியனர் கிறிஸ்டோபர் ஹார்போர்னிடமிருந்து 3 மில்லியன் பவுண்டுகளும், ஹாங்காங்கைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி அதிபர் பென் டெலோவிடமிருந்து 4 மில்லியன் பவுண்டுகளும் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கன்சர்வேடிவ் கட்சி 6 மில்லியன் பவுண்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், லேபர் கட்சி 4 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், லிபரல் டெமாக்ரட்ஸ் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட Elon Musk முயற்சி: பிரதமர் Keir Starmer குற்றச்சாட்டு!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தொழிலதிபர் இலோன் மஸ்க் பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட முயல்கிறார் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டனின் தெற்கு நகரமான சவுதாம்ப்டனில் Southampton கடந்த டிசம்பர் மாதம் 18 வயதுடைய ஹென்றி நோவாக் என்ற மாணவர், 23 வயதுடைய விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான ஹென்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது கைகளில் விலங்கிட்ட விவகாரம் தற்போது பிரிட்டன் அரசியலில் […]

உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் திடீர் அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஜெட் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானில் நடந்து வரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கான ஜெட் எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விமான நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவுகளில் 25-30 சதவீதம் ஜெட் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க செலவினமாகும். இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் […]

உலகம்

குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

  • June 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார். இதன்போது ​​அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடியை சந்தித்தார் வெனிசுலா பதில் ஜனாதிபதி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை […]

இலங்கை செய்தி

திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் […]