இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு சுவீடனில் உயரிய விருது!

  • May 18, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து பயணமானார். இந்நிலையில் மூன்றாவது நாடாக சுவீடனுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும். இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம்  என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய போர்வீரர்கள் தினம்!

  • May 18, 2026
  • 0 Comments

தேசிய போர்வீரர்கள் தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது என ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன தெரிவித்தார். இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள். […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை 06:00 – 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன. முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட […]

உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – இருவர் பலி!

  • May 18, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்குப் பகுதியான குவாங்சியில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , லியுஷோ நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் 08 கி.மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் கூறியுள்ளது. […]

இலங்கை செய்தி

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • May 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார். உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது […]

இலங்கை

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் படுகொலை : புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்திரசேகரம்  என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக தனது  குடும்பத்தினருடன் சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த அவர், இரண்டு மாதகால விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள  தனது வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதிக்கு பின்னர் அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை. இதனையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய யாழில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்ற […]

உலகம்

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கிருமி நீக்கம் செய்வதற்காக ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று நங்கூரமிடப்படவுள்ளது. கப்பலில் தங்கியிருக்கும் 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளை டச்சு அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 150 பேருடன் பயணத்தை ஆரம்பித்த அந்த கப்பலில் மே மாதம் 02 ஆம் திகதியன்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்றினால் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பிரான்ஸ், பிரித்தானியா, கனடாக […]

உலகம்

ஈரான் மீதான போர் குறித்து நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே கலந்துரையாடல்!

  • May 18, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கை தொடர்கின்ற நிலையில் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ட்ரம்பின் சமீபத்திய சீனப் பயணம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் மத்தியக் கிழக்கு பகுதியில் மோதல் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

சரிகமபவின் 3ஆவது Finalist ஆனார் இலங்கை வர்ஜா!

  • May 17, 2026
  • 0 Comments

சரிகமபவின் மூன்றாவது Finalist  ஆக இலங்கை பெண் வர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி சிறுவர்களின் அபாரமான திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து 6 மாதங்களை கடந்து விட்டது. இன்னும் 3 வாரத்தில் பிரம்மாண்ட இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. இந்ந நிலையில் கடல் கடந்து சென்று சரிகமபவில் கலக்கி கொண்டிருந்த இலங்கை சிறுமி வர்ஜா சரிகமபவின் 3ஆவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]