சரிகமபவின் 3ஆவது Finalist ஆனார் இலங்கை வர்ஜா!
சரிகமபவின் மூன்றாவது Finalist ஆக இலங்கை பெண் வர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி சிறுவர்களின் அபாரமான திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறது.
நிகழ்ச்சி ஆரம்பித்து 6 மாதங்களை கடந்து விட்டது. இன்னும் 3 வாரத்தில் பிரம்மாண்ட இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
இந்ந நிலையில் கடல் கடந்து சென்று சரிகமபவில் கலக்கி கொண்டிருந்த இலங்கை சிறுமி வர்ஜா சரிகமபவின் 3ஆவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும், இலங்கை ரசிகர்களுக்கு வர்ஜா நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.

ஒரு பாடல், ஒரு தருணம் – ஒரு குழந்தையின் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. சரிகமபா சீசன் 5-ல் வர்ஜாவின் இந்த நிகழ்ச்சி நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் தருணமாக மாறி உள்ளது.
அவர் இறுதி போட்டியிலும் வெற்றியுடன் நாடுத் திரும்ப இலங்கையர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.





