உலகம் செய்தி

வரலாற்றை முன்வைத்து அமெரிக்காவுக்கு பதிலடி தரும் ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தின் வரலாற்று குறிப்புகளை அரசியல் செய்தியாக பயன்படுத்தி வருகின்றன. ஈரானிய அதிகாரிகள், “இறுதியில் பலவீனமானவரே வெற்றி பெறுவார்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் வரலாற்றிலிருந்து முக்கிய நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகர்களுக்கு […]

உலகம் செய்தி

எதிர்ப்பை குற்றமாக்க வேண்டாம் – லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லா தலைவர் அழைப்பு

  • May 24, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் Naim Qassem, “எதிர்ப்பை குற்றமாக்கும் வகையில் லெபனான் அரசு எடுத்துள்ள முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒன்பது பேருக்கு எதிராக  அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் “எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடைகள் குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்காததற்காக பெய்ரூட் அரசையும் அவர் விமர்சித்தார். அதேவேளை, லெபனானை ஆக்கிரமிப்பதே இஸ்ரேல் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து 60,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

  • May 24, 2026
  • 0 Comments

வெப்பமான வானிலை காரணமாக, நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்ஸில் இருந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏறக்குறைய 394 பேர் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார். அதேநேரம் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு இங்கிலாந்தின் நிகர இடம்பெயர்வு சுமார் 171,000 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ( Darren Jones), “நாங்கள் பெரும் […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் – மீண்டும் உறுதியளித்த  ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என ஜனாதிபதி Masoud Pezeshkian உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்த உறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராகவும் திறந்த மனதுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் உடனடி முடிவுகள் அல்லாமல், படிப்படியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. தற்போது அனைத்து தரப்பினரின் கவனமும், குறிப்பாக தெற்கு லெபனானில் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை எட்டுவதிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. […]

இலங்கை

ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு கோரிக்கை!!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 1977ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரை எமது மூதாதேயர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக தங்களது வயல் காணிகளையும் வீடுகளையும் விட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தஞ்சம் புகுந்து மீண்டும் சில காலங்களுக்கு பின்னர் வருகை தந்தோம் எனவும் பாதிப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் […]

இலங்கை

திருகோணமலையில் காணி உரிமைக்கான மாவட்ட செயலணி ஆரம்பம்!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு காரணிகளால் காணிகளை இழந்த மக்கள் ஒன்றிணைந்து “காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணி – TiDALR” எனும் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர். இச்செயலணியின் தலைவராக திரு. ஏ.ஏ. சிபுனிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக திருமதி. எஸ். ஸஹீலா மற்றும் உபதலைவராக திரு. நா. சண்முகம் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். Human Elevation Organization நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான K. Nihal Ahamed அவர்களின் தலைமையில், திருகோணமலை சர்வோதய கூட்டமண்டபத்தில் மே மாதம் […]

இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல […]

இலங்கை

தங்கக் கடனுக்கான உச்சபட்ச வரம்பில் கட்டுப்பாடு : இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன்களுக்கான  தற்போதைய அதிகபட்ச LTV விகிதங்களை மேலும் கடுமையாக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுகை சபை தீர்மானித்துள்ளது. புதிய விதிகள் நாளைய தினம் முதல் அமலுக்கு வரவுள்ளன. இதற்கமைய உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV […]

ஐரோப்பா

EU வில் பிரித்தானியா சேர நினைத்தால் அதன் மறுப்பிரவேசம் துரிதப்படுத்தப்படும்!

  • May 24, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர முடிவு செய்தால் அதன் மறுப்பிரவேசம் விரைவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றக் கூட்டத்திற்கான ஐரோப்பிய தூதுக்குழுவின் தலைவர் சாண்ட்ரோ கோசி (Sandro Gozi), ஐக்கிய இராச்சியம் மீண்டும் சேருவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் “ஐரோப்பிய திட்டத்திற்கான ஒரு பெரிய வெற்றியாக” கருதும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதன் சேர்க்கை விரைவுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் […]

இந்தியா

த.வெ.க ஆட்சி நீடிக்காது : குழந்தைகள் அம்மாவை தேடுவதுபோல ஓடிவருவார்கள் – ஸ்டாலின்!

  • May 24, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 02 நாளைக்குக் கூட நீடிக்காது என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அவர்களுக்கு விழுந்தது சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது அல்ல. இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது. குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச […]