உலகம் செய்தி

கப்பல்மீது ஏவுகணை தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. எனினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய கடற்படையின் எச்சரிக்கைகளை அமெரிக்கப் படைகள் அலட்சியப்படுத்தியதால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் […]

இந்தியா

“சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது” : தேர்தல் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து!

  • May 4, 2026
  • 0 Comments

‘காமராஜர் தோற்றார், மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்’ […]

ஐரோப்பா செய்தி

சிறந்த பயணங்கள் வாரம்” ஆரம்பம் – மாற்றுப் போக்குவரத்துக்கு மக்களை ஊக்குவிக்க முயற்சி

  • May 4, 2026
  • 0 Comments

“சிறந்த பயணங்கள் வாரம்” (Better Journeys Week) மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்கள் தினசரி பயணங்களில் எளிய மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். முன்னர் “மாற்றுப் போக்குவரத்து வாரம்” என அறியப்பட்ட இந்த வருடாந்திர திட்டம், கெர்ன்சி (Guernsey), ஜெர்சி (Jersey) மற்றும் ஐல் ஆஃப் மேன் (Isle of Man) ஆகிய இடங்களில் மே 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த பிரசாரத்தின் நோக்கம், மக்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து, பேருந்து, […]

உலகம்

ஓக்லஹோமாவில் விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்!

  • May 4, 2026
  • 0 Comments

ஓக்லஹோமாவின் (Oklahoma) ஆர்கேடியா (Arcadia) ஏரிக்கு அருகில் நேற்று  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள்” கலந்துகொண்ட விருந்து நிகழ்வொன்றிலேயே மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது. முகமூடி அணித்த  இரண்டு நபர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் ஓக்லஹோமா சிட்டி மற்றும் எட்மண்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக,   கேமராக்களின் காட்சிகளை […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ ‘ஸ்பிரிங் ஸ்டோம்’ பயிற்சிக்குத் தயாராகும் பிரித்தானிய படை – ரஷ்ய எல்லை அருகே தீவிர இராணுவ ஒத்திகை

  • May 4, 2026
  • 0 Comments

நேட்டோ (NATO) பயிற்சிக்காக பால்டிக் (Baltic)நாடுகளுக்குச் செல்வதற்கு தயாராவதற்காக ஸ்கொட்லாந்தின் Royal Regiment படையினர் நகர்ப்புறப் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையின் 2வது பட்டாலியன் (Battalion) வீரர்கள், ரஷ்ய எல்லைக்கு அருகில் நடைபெறும் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியான ‘Spring Storm’ பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயிற்சி ஐரோப்பா முழுவதிலுமிருந்து நட்பு நாடுகளின் படைகளை ஒன்றிணைத்து, அவர்களின் போர் தயார்நிலையை சோதிக்கும் வகையில் நடைபெறுகிறது. இதன் மூலம் எஸ்டோனியா (Estonia) ஆயுதப்படைகளின் திறனும் […]

இலங்கை செய்தி

மாலைதீவு வங்கியின் கிளையை இலங்கையில் திறப்பது குறித்து ஆராய்வு!

  • May 4, 2026
  • 0 Comments

மாலைத்தீவு வங்கியின் (Bank of Maldives) கிளையொன்றை இலங்கையில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தரமான மாலைத்தீவு மீன்பிடி உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விரிவான முன்முயற்சிகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம் – என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு , ” எதிர்காலத்தை நோக்கி, வர்த்தக மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும், முதலீட்டாளர்களுக்கு […]

ஐரோப்பா

புற்றுநோய்களுக்கு ஒரு நிமிடத்தில் செலுத்தக்கூடிய நோயெதிர்ப்பு ஊசி அறிமுகம்!

  • May 4, 2026
  • 0 Comments

நுரையீரல், மார்பகம் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட  புற்றுநோய்களுக்கு ஒரு நிமிடத்தில் செலுத்தக்கூடிய நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசியை NHS அறிமுகப்படுத்தியுள்ளது. பெம்ப்ரோலிஸுமாப்பின் (pembrolizumab) எனக் கூறப்படும் இந்த ஊசியானது முந்தைய நரம்பு வழி சொட்டு மருந்து முறையுடன் ஒப்பிடும்போது, ​​சிகிச்சை நேரத்தை 90 சதவீதம் வரை குறைப்பதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஏறக்குறைய 14000 நோயாளர்கள்  இந்த விரைவான ஊசி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் NHS ஊழியர்களின் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல்

  • May 4, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம்( ADNOC ) அட்னாக்குடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தச் சம்பவம், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்தை மீறுகிறது என்றும் ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சுமத்தியுள்ளது. வர்த்தகக் கப்பல்களை […]

ஐரோப்பா செய்தி

ஹன்டா வைரஸ் – அச்சமடையத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 

  • May 4, 2026
  • 0 Comments

அட்லாண்டிக் கடலில் சொகுசுக் கப்பலொன்றில் ஹன்டா வைரஸ் (Hantavirus) பரவியதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சுமார் 150 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த எம்.வி. ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல் தற்போது கேப் வெர்டே (Cape Verde) கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது. கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளதென ஐரோப்பாவுக்கான உலக சுகாதார […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 4, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (04) கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) ஆகியோர் முன்னிலையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. மாலைதீவு – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுகாதாரம், விளையாட்டு, சுற்றுலா, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 01. […]