உலகம் செய்தி

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட காண்டாமிருகக் கொம்புகள்!

  • November 18, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவிலிருந்து ( South Africa) சிங்கப்பூர் விமான நிலையம் வழியாக லாவோஸுக்கு (Laos) கடத்தப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் விமான சரக்கு கையாளுபவர் SATS இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சுமார் 35.7 கிலோ எடைக்கொண்ட காண்டாமிருகக் கொம்புகளை  கடத்த முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பொதியில் சுமார் S$1.13 மில்லியன் (US$870,000) மதிப்புள்ள இருபது காண்டாமிருகக் கொம்புகளும், எலும்புகள், பற்கள் மற்றும் […]

இந்தியா

நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இரு வெளிநாட்டினர் கைது!

  • November 18, 2025
  • 0 Comments

செல்லுப்படியாகும் விசாக்கள் இன்றி நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட  விசாரணையில் அவர்கள் இருவரும் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தின் ருபைதிஹா எல்லையில் (Rupaidiha) பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லை இந்தியர்களுக்கும் நேபாள மக்களுக்கும் திறந்திருக்கும், ஆனால் வெளிநாட்டினர் இரு நாடுகளுக்கும் விசாக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது. இந்நிலையில் […]

உலகம்

ஜப்பானுக்கான சுற்றுலா விசா டிக்கெட்டுகளை இரத்து செய்த சீனர்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

ஜப்பானுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சீனா தங்கள் நாட்டு மக்களிடம் வலியுறுத்திய நிலையில் ஏறக்குறைய 491,000 டிக்கெட்டுகள் இரத்த செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் ரத்துகள் புதிய முன்பதிவுகளை விட 27 மடங்கு அதிகமாக இருந்ததாக சுயாதீன ஆய்வாளர் லி ஹான்மிங் ( Li Hanming) தெரிவித்துள்ளார். ஷாங்காய்-டோக்கியோ மற்றும் ஷாங்காய்-ஒசாகா பகுதிகளுக்கான  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 பரவலின் ஆரம்ப காலத்தில் இவ்வாறு விமான முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து […]

உலகம்

மக்கள் AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது – சுந்தர் பிச்சை வலியுறுத்தல்!

  • November 18, 2025
  • 0 Comments

மக்கள் AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் “கண்மூடித்தனமாக நம்பக்கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (Alphabet) தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். AI மாதிரிகள் “பிழைகளுக்கு ஆளாகின்றன” என்றும், மற்ற கருவிகளுடன் சேர்த்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். AI தொழில்நுட்பத்தை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, வளமான தகவல் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுவதாக அவர் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரைக்கு செல்லும் சின்னத்திரை நாயகி… அட இவங்களா?

  • November 18, 2025
  • 0 Comments

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்ற ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2இலும் நடித்து வருகின்றார். சீரியலில் நடித்து வந்தவர் இப்போது படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு நெல்லை பாய்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். ஹேமா இதற்கு முன்னரும் பல படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக நடித்ததில்லை. இந்த நிலையில் ஹேமாவின் வெள்ளித்திரை பயணத்திற்கு […]

உலகம்

ட்ரம்பின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியை அதிகரித்த இந்தியா!

  • November 18, 2025
  • 0 Comments

கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் போன்ற வரி விலக்கு பெற்ற துறைகள் இந்த ஐந்து மாதங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது ஒரு தற்காலிக […]

இலங்கை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை: என்.பி.பி. அரசு கூறுவது என்ன?

  • November 18, 2025
  • 0 Comments

சட்டம் தனக்குரிய கடமையை சரிவர செய்யுமென உறுதியாக நம்புகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது பங்களாதேஷில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் நடந்த காலப்பகுதியில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. இது விடயத்தில் தாமதம் […]

ஐரோப்பா செய்தி

எரிவாயு டேங்கர் கப்பலை தாக்கிய ரஷ்யா – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

உக்ரைனின் ஒடேசா பகுதிக்கு அருகே ரஷ்யாவின் தாக்குதலால் எரிவாயு டேங்கர் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில் குறித்த கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள எல்லை கிராமமான துல்சியாவிலிருந்து (Tulcea) மக்களை வெளியேற்ற ருமேனிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து குறைந்தது 50 பேர் மற்றும் அவர்களின் கால்நடைகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. துல்சியா (Tulcea) கிராமத்துடன் சியால்சியோய் (Ceatalchioi) மற்றும் ப்ளாரு  (Plauru) ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை நேட்டோ […]

பொழுதுபோக்கு

“இந்த சீசனில் யாருமே அப்படி இல்லை“ திவாகர் ஓபன்

  • November 18, 2025
  • 0 Comments

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் வாட்டர் மெலான் திவாகர். அதில் அவர் தெரிவிக்கையில், ஆக்டிங் ஸ்கில்லை வெளியே காட்ட வேண்டும் என்று தான் வந்தேன் அது நிறைவேறிவிட்டது. வெளியே நடிப்பு திறமையை காட்டுவதற்கும் 42 நாட்கள் எனது நடிப்பு தினசரி தெரிவதற்கும் வித்தியாசம் உண்டு என கூறினார். 60 நாள் கூட தாங்குமா என்று நினைத்தேன். கேம்ஸ், டாஸ்க்கில் பெரிதாக பங்கேற்கவில்லை. அதனால் தான் வெளியேறிருப்பதாக […]

இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிசாசா? கடவுளா?

  • November 18, 2025
  • 0 Comments

ஐ.நா. உரிமைகள் பேரவையை பிசாசு என விமர்சிக்கப்போவதும் இல்லை. கடவுள் என போற்றப்போவதும் இல்லை. நாட்டு நலன் கருதி நடு நிலைமையுடன் செயல்படுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பாலஸ்தீன மக்களின் சுயாதீன உரிமை தொடர்பில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அதேபோல நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. […]