உலகம்

பதற்றத்தை தணித்து அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா – ஈரான் இணக்கம்

கடந்த சில நாட்களாக நடந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தற்போது பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  தொடர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.

இந்நிலையில் தற்போது தாக்குதல்களை இடைநிறுத்தி அமைதி வழியை கடைப்பிடிக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கப்பல்கள் இனி அந்த நீர்வழிப்பாதையில் “சுதந்திரமாக” செல்ல முடியும் என்று பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜலசந்தியில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக வரும் செய்திகள் குறித்து ஈரான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஜூன் 17 அன்று, அமெரிக்காவும் ஈரானும் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. அதில், “அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதும்  அடங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, “வணிகக் கப்பல்கள் 60 நாட்களுக்குக் கட்டணமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்குத் தனது சிறந்த முயற்சிகளை” மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.

ஆனால், இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதல் நடத்தியதால், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் சமீப நாட்களாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்