இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிசாசா? கடவுளா?

ஐ.நா. உரிமைகள் பேரவையை பிசாசு என விமர்சிக்கப்போவதும் இல்லை. கடவுள் என போற்றப்போவதும் இல்லை. நாட்டு நலன் கருதி நடு நிலைமையுடன் செயல்படுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பாலஸ்தீன மக்களின் சுயாதீன உரிமை தொடர்பில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அதேபோல நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மத்தியஸ்தத்துடன் செயல்பட்டது. ஜெனிவா மனித உரிமைகளை பேரவையை பேய் என்றோ கடவுள் என்றோ நாம் குறிப்பிடமாட்டோம்.

மனித உரிமைகளை வலுப்படுத்த தேசிய பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நமது உறுதியான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.” – எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்