உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் ரஷ்யாவால் குறிவைக்கப்படுவார்கள் – புட்டின் எச்சரிக்கை
உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள எந்தவொரு மேற்கத்திய துருப்புக்களும் ரஷ்யாவால் குறிவைக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். உக்ரைனின் 26 நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வான், கடல் மற்றும் நிலம் மூலம் துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதனையடுடுத்து, வியாழக்கிழமை விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் ரஷ்ய ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் மோதலில் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த டொனால்ட் டிரம்பின் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்றாலும், […]













