பிரான்சில் மலை உச்சியில் இருந்து விழுந்த பேருந்து : மூவர் பலி, ஆபத்தான நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதி!
தென்மேற்கு பிரான்சில் சுற்றுலா பயணிகள் பேருந்தொன்று குன்றில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர. அன்டோராவிற்கு அருகிலுள்ள போர்டே-புய்மோரன்ஸின் பைரனீஸ் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பேருந்தில் 48 பேர் பயணித்துள்ள நிலையில், 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஸ் மற்றும் கொலம்பிய நாட்டவர்கள் […]













