பிள்ளைகளுக்கு சமூக ஊடகத் தடை தொடர்பில் ஆலோசனை நடத்தும் இந்தோனீசியா
இந்தோனீசியா, 16 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியா அது போன்ற தடை ஒன்றை விதிக்க முடிவெடுத்தது. அதேபோல் இந்தோனீசியாவும் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தகைய தடையை விதிப்பது அவசியமா என்பதை இந்தோனீசிய அரசாங்கம் ஆராயும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவு இயக்குநர் இம்ரான் பம்பூடி கூறினார். அத்தடை உடனடியாகச் செயல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். தடையை விதிப்பதென்றால் குறைந்தது மூவாண்டுகள் ஆகும் […]













