மத்திய கிழக்கு

மத்திய காசாவில் உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 4 குழந்தைகள் உயிரிழப்பு

  • December 4, 2024
  • 0 Comments

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள […]

இலங்கை

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • December 4, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசு கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (04.12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது நீண்ட காலமாக வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து  ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை

யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் 188 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

  • December 4, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் இன்று (4) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 188 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகில் காணப்பட்ட 7 பயணப் பொதிகளில் இந்த கேரள கஞ்சா கையிருப்பு இருந்ததாகவும், அதன் பெறுமதி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு மேலதிக சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

  • December 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 03 ஊழியர்களுக்கு $350,000 கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட டிராய் தாம்சன் மேயராக இருந்தபோது டாக்டர் ரால்ஸ்டன் தனது பதவியை ராஜினாமா செய்தார். குறித்த ஊழியர்களுக்கு அவர்களின் ஒப்பந்த விதிமுறைகளுக்கு அதிகமாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குயின்ஸ்லாந்து தணிக்கை அலுவலகம் (QAO) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 6வது பிரிவு கவுன்சிலர் சுசி பாட்கோவிச், டாக்டர் ரால்ஸ்டனின் பணிநீக்கப் பலன்களில் யார் கையெழுத்திட்டார்கள் என்பதை கவுன்சிலர்கள் தெரிவிக்க […]

ஆசியா

மோசடி வழக்கில் டுருவோங் மை லான்னுக்கு மரண தணைடனையை இறுதி செய்த வியட்நாம் நீதிமன்றம்

  • December 4, 2024
  • 0 Comments

வியட்னாமின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து லான் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த வியட்னாமிய நீதிமன்றம் மரண தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) தீர்ப்பளித்தது. 68 வயது லான், SCB வங்கி மூலம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. லான் கிட்டத்தட்ட 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்துள்ளார். தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை […]

இந்தியா

இந்தியா – ஆறு நாள்களில் காணாமற்போன 334 பிள்ளைகளை மீட்ட ஒடிசா பொலிஸார்

  • December 4, 2024
  • 0 Comments

காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஒடிசா காவல்துறையினர், கடந்த ஆறு நாள்களில் மட்டும் 306 பெண் பிள்ளைகள் உட்பட 334 சிறார்களை மீட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை புவனேஸ்வரில் உள்ள பெண்கள், பிள்ளைகளுக்கு எதிரான குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் காணாமற்போன சிறார்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். “ஆறு நாள்களில் ஒடிசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 334 பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர். […]

மத்திய கிழக்கு

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 4,047 பேர் உயிரிழப்பு! லெபனான் அமைச்சர்

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் அக்டோபர் 7, 2023 முதல் 4,047 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16,638 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார். தாக்குதல்களில் 316 குழந்தைகள் மற்றும் 790 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அபியாட் மேலும் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வெடித்த காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் […]

வட அமெரிக்கா

கனடாவில் வைத்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீறினால் அபராதம்!

  • December 4, 2024
  • 0 Comments

கனடாவில் மருத்துவர்கள் 05 ஆண்டுகள்   கியூபெக்கின் பொது சுகாதார வலையமைப்பில் பணியாற்ற கட்டாயப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டத்தை மீறும் வைத்தியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 02 இலட்சம் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கனடாவில் மருத்துவர்களின் படிப்பிற்காக  $435,000 முதல் $790,000 வரை செலவாகுவதாக  சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார். ஆகவே இவ்வாறாக மக்களின் பணத்தில் கல்வி கற்பவர்கள் அவர்களுக்கு சேவை செய்வதும் கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

பொழுதுபோக்கு

புஷ்பா – 2… அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • December 4, 2024
  • 0 Comments

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது புஷ்பா தி ரூல். இந்த படம் நாளைய தினம் சர்வதேச அளவில் 12,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பிரீ புக்கிங்கில் மட்டுமே புஷ்பா 2 படம் 100 கோடி ரூபாய்களை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், முதல் நாளிலேயே படம் 300 […]

ஆசியா

தெற்குத் தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு

  • December 4, 2024
  • 0 Comments

தெற்குத் தாய்லாந்தைப் பாதித்துள்ள வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 29ஆக அதிகரித்திருப்பதாக புதன்கிழமையன்று (டிசம்பர் 4) அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 30,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சில நாள்களுக்குக் கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் ஏற்கெனவே தொடர் வெள்ளத்தால் 155,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தாய்லாந்து அரசாங்கத்தின் பொதுத் தொடர்புப் பிரிவு கூறியது. பட்டானி, நராத்திவாட், சொங்க்லா, நக்கான் சி தம்மாராட், ஃபாத்தாலுங் […]