இலங்கை செய்தி

யாழில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

  • August 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் காளவாடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

சாகர காரியவசத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

  • August 1, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டக் குழு, அந்தக்ரகட்சியின் , பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை நீக்கி, ரமேஷ் பத்திரனவை அந்தப் பதவிக்கு நியமிக்கும் இரண்டு பிரேரணைகளை ஏகமனதாக நிறைவேற்ற தீர்மானித்துள்ளது. இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதில் மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், தேர்தல் வேட்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை அண்மையில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து […]

பொழுதுபோக்கு

வித்தியாசமாக புரொமோஷன் செய்த பிரஷாந்த்… இறுதியில் 2,000 ரூபாய் அபராதம்

  • August 1, 2024
  • 0 Comments

‘அந்தகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பிரசாந்த். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் பிரசாந்த் புரமோஷன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு யூடியூப் சேனலுக்கு வித்தியாசமாக பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டிதான் அவருக்கு வில்லங்கமாக மாறிவிட்டது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்தது தான் பிரச்சினைக்குக் காரணம். பிரசாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே, பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் கேள்விக்கு […]

இலங்கை செய்தி

விளம்பரங்களுக்கு தடையா?

  • August 1, 2024
  • 0 Comments

ஜனவரி 1, 2025 முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கிராமப்புற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இடம்பெறும் விளம்பரங்களை வெளியிடுவது தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சில நோய்களை உணவினால் குணப்படுத்த முடியும் என்ற பிரச்சாரம் தவறானது என பிரதிப் பணிப்பாளர் […]

செய்தி விளையாட்டு

மன ஆதரவை கொடுங்கள் – சனத் வேண்டுகோள்

  • August 1, 2024
  • 0 Comments

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை (02) நடைபெறவுள்ளது. இதில் வீரர்களுக்கு மனரீதியாக அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு விளையாட்டு ரசிகர்களை சனத் ஜயசூரிய கேட்டுக்கொள்கிறார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் குறித்து இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 06 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக கடமையாற்றும் சனத் […]

இந்தியா செய்தி

இந்தியா – வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உயர்வு

  • August 1, 2024
  • 0 Comments

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 291 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள பொலிஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, […]

ஆசியா செய்தி

லெபனானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு மக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்

  • August 1, 2024
  • 0 Comments

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள இந்திய தூதரகம், லெபனானுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், இயக்கங்களை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெபனானில் உள்ள இந்திய தூதரகம் X ல், “இந்த பிராந்தியத்தில் சமீபத்திய அதிகரிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் லெபனானுக்கு அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். லெபனானில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் எச்சரிக்கையுடன் செயல்படவும், […]

பொழுதுபோக்கு

நடிப்பு அசுரனின் 2ஆவது சிங்கிள்… ஆடியோ லான்ச் திகதியும் அறிவிப்பு

  • August 1, 2024
  • 0 Comments

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள திரைப்படம், ‘தங்கலான்’. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புதுமையான கதைக்களத்தில் இயக்கி உள்ளார். பழங்குடி மக்கள், ஆங்கிலேயர்களால் எப்படி தங்கம் எடுக்கும் பணிக்கு அடிமை படுத்தப்பட்டனர் என்பதே இப்படத்தின் மைய கதை என்பது இப்படத்தின் ட்ரைலர் மூலம் தெரிய வந்தது. ‘தங்கலான்’ படத்தில் சியான் […]

உலகம்

ரஷ்ய இராஜதந்திரியை வெளியேற்றிய மால்டோவா

தேசத்துரோகம் மற்றும் சதி குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு மால்டோவன் அதிகாரிகளை கைது செய்த நிலையில் ரஷ்ய தூதர் ஒருவரை வெளியேற்றியதாகவும், முறையான எதிர்ப்பை வெளியிட ரஷ்யாவின் தூதரை அழைத்ததாகவும் மால்டோவா அறிவித்துள்ளது. ரஷ்ய தூதரகத்தின் துணை பாதுகாப்பு இணைப்பாளருக்கு தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மால்டோவன் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது, இது நாடுகளின் மோசமடைந்து வரும் இருதரப்பு உறவுகளுக்கு சமீபத்திய பின்னடைவாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு மால்டோவா […]

உலகம் செய்தி

கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்படும் அமெரிக்க பத்திரிகையாளர் உட்பட 16 கைதிகள்

  • August 1, 2024
  • 0 Comments

பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய பரிமாற்ற ஒப்பந்தத்தில் 16 கைதிகள் ரஷ்ய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் மற்றும் அமெரிக்க மரைன் வீரர் பால் வீலன் ஆகியோர் இருப்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தினார். துருக்கியின் கூற்றுப்படி, பரிமாற்றத்தின் பகுதியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிறைகளில் இருந்த எட்டு ரஷ்யர்கள் மாற்றாக திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா, நார்வே, ஸ்லோவேனியா, போலந்து […]