இலங்கை

ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பல்கலைக்கழக சட்ட பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது.

விளையாட்டு

IPL Match 14 – 125 ஓட்டங்கள் குவித்த மும்பை அணி

  • April 1, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இஷான் 1 […]

ஐரோப்பா

முந்தைய அரசாங்கத்தின் ஸ்பைவேர் பயன்பாடு குறித்து போலந்து விசாரணை

போலந்து அதன் முந்தைய அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஸ்பைவேர் பெகாசஸைப் பயன்படுத்தியது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாராளுமன்ற விசாரணை நடைபெற்று வருவதோடு, எதிர்காலத்தில் முன்னாள் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வாய்ப்பு உள்ளது. போலந்தின் புதிய நீதி மந்திரி ஆடம் போட்னர் வரும் மாதங்களில் பெகாசஸால் குறிவைக்கப்பட்ட நபர்களை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் போலந்து சட்டத்தின் கீழ், அவர்கள் நிதி இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் சாத்தியமான குற்றவியல் நடவடிக்கைகளில் பங்கு பெறுவார்கள் என […]

தமிழ்நாடு

கோவை – பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி… தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

  • April 1, 2024
  • 0 Comments

கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன் தம்பதி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்களுக்கு 10 வயது ஆண் குழந்தை மற்றும் 8 வயது பெண் குழந்தை கோகுலப்பிரியா ஆகியோர் உள்ளனர். நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக சிறுமி […]

இலங்கை

கேரள கஞ்சாவுடன் சிக்கிய நான்கு கலால் அதிகாரிகள்!

  • April 1, 2024
  • 0 Comments

கேரள கஞ்சா தொகை ஒன்றுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 45 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஐரோப்பா

பிரான்சில் 9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு!!

  • April 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும் மலையடிவார கிராமத்துக்கு சுற்றுலா சென்ற சிறுவனே காணாமல் போயிருந்தான். கடந்த வருடம் ஜூலை 8 ஆம் திகதி மாலை 5.15 மணிக்கு இறுதியாக எமிலியை கண்டிருந்தார்கள். அதன் பின்னர் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் , பல […]

இந்தியா

அருணாச்சல் விவகாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா !

  • April 1, 2024
  • 0 Comments

இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அம்மாநிலத்தில் எல்லைகளில் உள்ள பல பகுதிகளின் பெயர்களை சீன மொழியில் மாற்றி அறிவித்து வருகிறது. ஏற்கெனவே 2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் […]

ஆசியா

காசா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் இஸ்ரேல் இராணுவம்

இரண்டு வார தாக்குதலுக்குப் பிறகு காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது, இன்று அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் அல்-ஷிஃபா மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் திரும்பினர். ஹமாஸ் மருத்துவமனைகளை ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இஸ்ரேலிய இராணுவம் பொறுப்பற்ற முறையில் பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், ஏற்கனவே போரில் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் சுகாதாரத் துறையை அழித்ததாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆசியா

இம்ரான் கானுக்கு எதிரான சிறை தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • April 1, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான வழக்குகள் காரணமாக இன்னும் சிறையில் உள்ளார்.

இலங்கை

இலங்கையில் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா திட்டம்!

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடி திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முன்னோடித் திட்டத்தின் அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 31 மார்ச் […]