ஆசியா

புதிய ஹைப்பர்சோனிக் இடைநிலை ஏவுகணையை  பரிசோதித்த வடகொரியா!

  • April 3, 2024
  • 0 Comments

அண்டை நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் அணுசக்தி மோதலை ஆழப்படுத்தும் ஆயுத ஆர்ப்பாட்டங்களில் ஒரு ஓட்டத்தை நீட்டித்து, திடமான உந்துசக்திகளைக் கொண்டு இயங்கும் புதிய ஹைப்பர்சோனிக் இடைநிலை ஏவுகணையை சோதித்ததாக வட கொரியா கூறியது. இந்தச் சோதனையில் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஆசியாவிலும் போட்டியாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் ஆயுதக் களஞ்சியத்தைத் தொடர்வதால், அனைத்து எல்லைகளிலும் உள்ள ஏவுகணைகளுக்கான திட எரிபொருள், அணுசக்தி திறன் கொண்ட அமைப்புகளை உருவாக்கும் திறனை தனது நாடு […]

வட அமெரிக்கா

கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் பலி!

  • April 3, 2024
  • 0 Comments

கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கனடாவின் தென்கிழக்கு எட்மோன்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரண்டு பெரிய நாய்கள் குறித்த சிறுவனை கடித்து குதறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாய் கடிக்கு இலக்காகிய சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இந்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த சிறுவானை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நாய்களையும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் […]

ஐரோப்பா

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபான்களை நீக்க ரஷ்யா அதிரடி நடவடிக்கை

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபான்களை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைவர்களுடன் விவாதிக்க முக்கியமான விஷயங்கள் இருப்பதாகவும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து தலிபான்களை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது எங்களுக்கு அடுத்ததாக இருக்கும் ஒரு நாடு,”நாங்கள் அழுத்தமான சிக்கல்களைத் தீர்க்க வேண்டும், இதற்கும் உரையாடல் தேவைப்படுகிறது, எனவே இந்த விஷயத்தில் நாங்கள் நடைமுறையில் எல்லோரையும் போலவே அவர்களுடன் […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் மைத்திரி!

  • April 3, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து இதனை அறிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய கருத்து தொடர்பில் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

கெஹலியவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

  • April 3, 2024
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  சுஜீவ நிஷங்க இந்தத் தீர்மானத்தை வழங்கினார். தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

விடாமுயற்சி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மீண்டும் ஆரம்பிக்கப்போகிறதாம்

  • April 3, 2024
  • 0 Comments

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். அநேகமாக இன்னும் சில வாரங்களில் […]

இலங்கை

இலங்கையில் இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!

  • April 3, 2024
  • 0 Comments

ஆயுதப்படைகளின் விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்புக் காலத்தில், இராணுவத் தலைமையகத்திற்கு வந்து அறிக்கையளிக்கும் இராணுவத்தினருக்கு தொடர்ந்து சேவையில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், ஒருவர் இராணுவத்திற்கு ஏதேனும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், பணம் வசூலிக்கப்படும். ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு […]

ஆசியா

தைவானில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஜப்பானுக்கும் எச்சரிக்கை!

  • April 3, 2024
  • 0 Comments

தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். குறித்த நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து மாடி கட்டடம் ஒன்று 45 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுனாமியின் முதல் […]

இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கை வந்தடைந்தனர்!

  • April 3, 2024
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கடந்த  33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இவ்வாறு இன்று (03.04) நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

ஐரோப்பா

லண்டனில் நபர் ஒருவர் படுகொலை!

  • April 3, 2024
  • 0 Comments

மேற்கு லண்டனில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மேற்கு கென்சிங்டனில் உள்ள கொமேராக் சாலையில் ஏற்பட்ட குழப்பம் குறித்து காவல்துறை மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 21 வயதான இளைஞர் ஒருவரை மீட்டதுடன், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரி […]