செய்தி விளையாட்டு

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம் விதித்த BCCI

  • April 4, 2024
  • 0 Comments

ஐபிஎல் 2024ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டைப் பேணியதற்காக பிசிசிஐ கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஒட்டுமொத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும் தண்டித்துள்ளது. அவர்களின் இரண்டாவது ஓவர் ரேட் குற்றமானது ஐபிஎல் நடத்தை விதி மீறலாக தகுதி பெற்றது. ஏப்ரல் மாதம் விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டியின் போது டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் […]

ஐரோப்பா செய்தி

சுவிஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்

  • April 4, 2024
  • 0 Comments

சுவிஸ் 10 பிரதிநிதிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பு மனுதாக்கல் தொடங்குகின்றது. 2010 ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் நீதிக்கும், இறையாண்மைக்குமாக ஜனநாயக வழியில் நேர்கொண்ட கொள்கையுடன் போராடிவருகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதன் நான்காவது தவணைக்கான சுவிற்சர்லாந்தின் 7 தேர்தல் தொகுதிகளில், 10 பிரதிநிதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 15, 2024 அன்று தொடங்கவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுவிற்சர்லாந்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டினை […]

ஆசியா செய்தி

தொலைபேசி கொடுக்க மறுத்ததால் பாகிஸ்தானில் 12 வயது சிறுவன் தற்கொலை

  • April 4, 2024
  • 0 Comments

பாகிஸ்தான்-ரெய்விண்ட் நகரில் 12 வயது சிறுவன், அவனது தாய் மொபைல் போன் கொடுக்க மறுத்ததால், தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக, காவல்துறை அதிகாரிகல் தெரிவித்துள்ளனர். லாகூர் காவல்துறையின் கூற்றுப்படி, அய்யன் தனது தாயிடம் தொலைபேசிக்காக கெஞ்சினார், ஆனால் அவர் மறுத்துவிட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். திரும்பி வந்தபோது, தனது மகனின் உயிரற்ற உடல் கூரையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். சிறுவன் சுவரில் இருந்த மூங்கில் கம்பத்தில் கட்டப்பட்ட கயிற்றை தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில், […]

ஆப்பிரிக்கா செய்தி

எல் நினோ வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்த ஜிம்பாப்வே

  • April 4, 2024
  • 0 Comments

ஜிம்பாப்வே அரசாங்கம் எல் நினோ வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தது, பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவ நாட்டிற்கு 2 பில்லியன் டாலர் உதவி தேவை என்று ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா தெரிவித்துள்ளார். எல் நினோ காலநிலையால் தூண்டப்பட்ட கடுமையான வறண்ட வானிலை தென்னாப்பிரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. “எந்த ஒரு ஜிம்பாப்வேயும் பட்டினியால் இறக்கவோ கூடாது” என்று Mnangagwa ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “அதற்காக, எல் நினோ-தூண்டப்பட்ட வறட்சியின் காரணமாக, நாடு […]

உலகம் செய்தி

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளி

  • April 4, 2024
  • 0 Comments

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாதனை படைத்தனர். இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை. அந்தச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 62 வயது ரிச்சர்ட் சிலேமனின் உடல்நலம் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது. அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவர் வீடு திரும்ப அனுமதித்தனர். அவருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு செயல்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சிலேமன் வீடு திரும்பிவிட்டதாக நியூயார்க் […]

உலகம் செய்தி

பிரபல அமெரிக்க யூடியூபர் ஹைட்டியில் கடத்தப்பட்டார்

  • April 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவின்  பிரபல  யூடியூபர், Addison Pierre Maalouf, கரீபியன் நாடான ஹைட்டியில் கடத்தப்பட்டார், ஆனால் ஹெய்டிய கும்பல் தலைவர்களுக்கு 50,000 டொலர் கப்பம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் நாட்டிலேயே சிக்கியுள்ளார். ஜிம்மி “பார்பெக்யூ” செரிசியரை நேர்காணல் செய்ய மார்ச் மாதம் Maalouf ஹைட்டிக்குச் சென்றார். இதன்போது மார்ச் 14 அன்று, Maalouf மற்றும் அவரது ஹைட்டியன் ஃபிக்ஸர், Jean Sacra Sean Roubens, கடத்தப்பட்டு 17 நாட்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஹைட்டிக்கு பயணம் செய்வதற்கு எதிராக […]

இலங்கை செய்தி

முன்னறிவிப்பின்றி வெளிநாட்டில் இருக்கும் இலங்கை இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

  • April 4, 2024
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு தமது பிரிவுக்கு அறிவிக்காமல் சேவையில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் அதிக சம்பளத்தை எதிர்பார்த்து ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கு தயாராகி வருவதாகவும், அல்ஜசீரா செய்தி வெளியிட்டு, சில நாட்களிள் பின்னர், பாதுகாப்பு அமைச்சு […]

இலங்கை செய்தி

யூனியன் கல்லுாரி விவகாரம் – பொலிஸ் அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

  • April 4, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. பொலிஸார் சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை விசாரணைக்கு அழைத்த மைக்காக பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிகைள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, […]

இலங்கை செய்தி

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வழங்காமலிருக்க இராணுவத்திற்கு மேலும் கால அவகாசம்

  • April 4, 2024
  • 0 Comments

வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு எதிராக எழுத்துமூல ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இராணுவம் நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது. ஊடகவியலாளர் பி.நிரோஷ்குமார், தகவலறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியுள்ளது. இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ […]

இலங்கை செய்தி

எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்!

  • April 4, 2024
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும், தமது மூத்த சட்டத்தரணி புகழேந்தி அவர்களது வழித்துணையுடன் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் நேற்றுயாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர். இவர்களை, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் நேரில் சென்று சந்தித்து, அவர்களது சுகநலன் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் […]