ஐரோப்பா

காங்கிரஸ் எம்பி-யான சசி தரூருக்கு செவாலியே விருது… பிரான்ஸ் அரசு பெருமிதம்!

  • February 21, 2024
  • 0 Comments

காங்கிரஸ் எம்பி-யான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி-யான சசி தரூர், ‘இந்தியாவின் இருண்ட காலம்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. இதன்படி 2022ம் ஆண்டு இந்த விருதை பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது. இந்திய-பிரான்ஸ் உறவுகளை ஆழப்படுத்த சசிதரூர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக […]

வட அமெரிக்கா

ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக பதியப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

  • February 21, 2024
  • 0 Comments

ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 மாத காலப் பகுதியில் பொலிஸ் வாகனங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதிக வேகமாக வாகனத்தை செலுத்தியமை தொடர்பிலே இந்த அனைத்து முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் காணப்படும் கமராக்களின் ஊடாக தானியங்கி அடிப்படையில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ரொறன்ரோ பொலிஸ் சேவைக்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் இவ்வாறான பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ரோந்து வாகனங்கள், சிறைச்சாலை வாகனங்கள், கைதிகள் வாகனங்கள், வாகனத் […]

தமிழ்நாடு

கோவை – பணத்தையும் நகையையும் திருடிய பணிப்பெண்- கையும் களவுமாக பிடித்த வீட்டார்

  • February 21, 2024
  • 0 Comments

கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முன்மொழிவு!

  • February 21, 2024
  • 0 Comments

இலங்கையில் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் குறைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீர் மின் உற்பத்தி அதிகரிப்பால், மேற்படி நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம்

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

  • February 21, 2024
  • 0 Comments

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து,சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர். ஐரோப்பாவுக்கு சென்று விட்டால் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரதிர்ஷ்டமே காத்திருந்தது. மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் இருந்தனர் என […]

இலங்கை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் தானியங்களுக்கான வரி அதிகரிப்பு!

  • February 21, 2024
  • 0 Comments

பீன்ஸ், பட்டாணி, சோளம், கௌபீ மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட சரக்கு வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, சிறப்பு வணிக வரி 300 ரூபாய் வரை உயர்தப்பட்டுள்ளது. இது தவிர மக்காச்சோளத்துக்கு  25 ரூபாய் சரக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சோளம், அரிசி, பச்சைப்பயறு, கௌபீஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

பேராதனை- கிரிக்கெட் மட்டையால் தாக்கி ஒருவர் கொலை ; இருவர் கைது!

  • February 21, 2024
  • 0 Comments

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் ​பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 9 வயது சிறுவன் கைது

  • February 21, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் 32 வயது நபர் உயிரிழந்தமை தொடர்பில் 9 வயதுப் பிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரைக் காப்பற்ற முடியவில்லை என்று AFP செய்தி கூறுகிறது. உயிரிழந்தவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட பிள்ளை உயிரிழந்த உறவினர் என்று தெரியவந்தது. அந்தப் பிள்ளை ஆணா பெணா, பெயர் என்ன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவருவது பற்றித் தாங்கள் பரிசீலிப்பதாக அந்தப் […]

பொழுதுபோக்கு

மாமியார் தலையில் துண்டை போட்ட ஜெயம் ரவி… காரணம் தெரியுமா?

  • February 21, 2024
  • 0 Comments

அறிமுக இயக்குனர்களை நம்பி படம் நடிக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்தில் முதல் வாரம் இறுதியில் நல்ல வசூலை […]

வாழ்வியல்

20 நிமிடம் சூரிய ஒளியில் நின்றால் ஏற்படும் நன்மைகள்!

  • February 21, 2024
  • 0 Comments

தினமும் நாம் குறைந்தது 20 நிமிடங்களாக சூரிய ஒளிபடும்படி நிற்க வேண்டும். இப்படி செய்தால் நமது உடலில் வைட்டமின் டி உற்பதியாக உதவும். இந்நிலையில் வைட்டமின் டி மட்டுமல்ல, நல்ல உறக்கம், நல்ல சருமம், வலுவான சதைகள், வலுவான எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். இந்தியாவைப்போல் 12 மணி நேரம் வெயில் இருக்கும் இடங்களில் 22 முதல் 30 நிமிடங்கள் வரை நாம் வெயிலில் நிற்கலாம். குறிப்பாக அதிகாலை, மாலை வெயில்தான் சரியாக […]

error: Content is protected !!