உலகம்

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து,சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர்.

ஐரோப்பாவுக்கு சென்று விட்டால் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரதிர்ஷ்டமே காத்திருந்தது.

மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது.பலரின் நிலைமை என்னவென தெரியவில்லை.

இதுபற்றி வங்காளதேச அரசு நேற்று (20) வெளியிட்ட செய்தியில், வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என தெரிவித்து உள்ளது.இதனை அந்நாட்டு வெளிவிவகார துறை உறுதிப்படுத்தியது.

அவர்களில் 5 பேர் வங்காளதேச நாட்டின் மதரிப்பூர் மற்றும் 3 பேர் கோபால்கஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content