ஐரோப்பா செய்தி

டோரி கட்சியில் இருந்து இங்கிலாந்து எம்.பி இடைநீக்கம்

  • February 24, 2024
  • 0 Comments

லண்டனின் லேபர் மேயர் சாதிக் கான் இஸ்லாமியர்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறியதற்காக மன்னிப்பு கேட்க மறுத்த பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி,தங்கள் முன்னாள் துணைத் தலைவரை நாடாளுமன்றக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. சட்டமியற்றுபவர் லீ ஆண்டர்சனின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து, பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் டோரிகள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபரில் காசாவில் போர் வெடித்ததில் இருந்து அதிகரித்த துருவமுனைப்புக்கு மத்தியில் இஸ்லாமோஃபோபியா மற்றும் யூத-எதிர்ப்பு சம்பவங்கள் இங்கிலாந்து முழுவதும் வியத்தகு […]

ஐரோப்பா

தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நவல்னியின் உடல்

அலெக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் சிறையில் இருந்தபோது இறந்த ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியின் செய்தித் தொடர்பாளர், இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் இன்னும் தீர்மானிக்கப்பட உள்ளன என்றார். அதிகாரிகள் தலையிடுவார்களா என்பது “தெளிவாக இல்லை” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உலகம்

மறதியாக ஓவனில் வைத்ததால் ‘ஆப்பிள் கிரம்பிள்’-ளாக மாறிய Apple iPad – இணையத்தில் வைரலான பதிவு

  • February 24, 2024
  • 0 Comments

ஒரு பெண் கவனக்குறைவாக தனது ஆப்பிள் ஐபேடை, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தியிருக்கிறார். இதனால் அந்த ஐபேட் மீண்டும் சரி செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துவிட்டது. உடைந்த ஐபேட் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரிஜினல் பதிவில், “எனது அம்மா, தற்செயலாக அவரது ஐபேடை ஓவனில் வைத்து சூடுபடுத்திவிட்டார் ” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவு சுமார் 40 ஆயிரம் ஆதரவு வாக்குகளைப் பெற்றுள்ளது.புகைப்படத்தை பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் […]

விளையாட்டு

இலங்கை வீரர் ஹசரங்கவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

  • February 24, 2024
  • 0 Comments

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா […]

இலங்கை

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…

  • February 24, 2024
  • 0 Comments

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது. தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. தீயினால் வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமாகியதுடன் வீட்டின் கூரையும் […]

இந்தியா

குரங்கு காய்ச்சல்: சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்

கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்றுவரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர். கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றுவரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் சிவமோகா, உத்தர கன்னடா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ […]

உலகம்

போப் பிரான்சிஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள வாட்டிகான் நிர்வாகம்

  • February 24, 2024
  • 0 Comments

மக்களை சந்திக்கும் போப் பிரான்சிஸ்ஸின் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு மிதமான காய்ச்சல் இருப்பதாக வாடிகன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கிறிஸ்தவர்களின் மத குருவாக கருதப்படுபவர் போப் ஆண்டவர். வாடிகன் நகரில் வசித்து வரும் இவர் உலகம் முழுவதிலிருந்து வரும் கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து உரையாடுவது வழக்கம். தற்போதைய போப்பாக அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ் இருந்து வருகிறார். 87 வயதான அவர் அடிக்கடி உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார். சிறுவயதின் போது அவருக்கு நுரையீரலில் […]

உலகம்

மால்டாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி பலி 

மத்திய தரைக்கடல் தீவில் இருந்து மால்டாவிலிருந்து ஆயுதப்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். சுமார் 21 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் சிரியா, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. மேலும் மால்டாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஜோன்கோர் பகுதியில் உள்ள மீன் பண்ணைகளுக்கு அருகில் பல குடியேறிகளை ஏற்றிச் செல்லும் படகு குறித்து வெள்ளிக்கிழமை முன்னதாகவே […]

இலங்கை

இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் சிறீதரன் இடையே. சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு (India House) கடந்த புதன்கிழமை (21) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அழைத்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு செய்யப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்ததுடன், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டார். தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். இலங்கைக்கான […]

இலங்கை

இலங்கையில் பூமிக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட நகரம்!

  • February 24, 2024
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று பொலன்னறுவை தொல்பொருள் […]

error: Content is protected !!