பொழுதுபோக்கு

ஸ்ரித்திகாவை திருமுருகன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா??

  • February 1, 2024
  • 0 Comments

மலையாள நடிகையும், மாடலுமான ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், தந்தையின் பிசினஸ் காரணமாக சென்னையில் அவருடைய குடும்பம் செட்டில் ஆனது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டே.. திரைப்படங்களிலும் நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் […]

பொழுதுபோக்கு

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்? ரஜினியின் அந்தர் பல்டி இதுதான்…

  • February 1, 2024
  • 0 Comments

சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் வந்து சாதித்து காட்டியும் உள்ளனர். சாதிக்காமல் சறுக்கி விழுந்தும் உள்ளனர். கமலும் இப்போது கட்சி தொடங்கிய நிலையில், ஒரு அரசியல் கட்சியின் கூட்டணி அவரது கட்சிக்கு தேவைப்படுகிறது. மேலும் ரஜினி அரசியலில் இறங்குகிறேன் என பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அதில் இருந்து பின்வாங்கிய நிலையில் பிஜேபியுடன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இப்போது பிஜேபி உடனும் இணைய போவதில்லை என கூறஜவஜட்டார். இந்நிலையும் தளபதி விஜய் அரசியலில் வருவதற்காக பல்வேறு […]

ஆசியா

விரைவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம்

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை குழு ஆய்வு செய்து வருவதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் கத்தார் பிரதமருடன் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போர் நிறுத்த முன்மொழிவு ஏற்பட்டது. இந்நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் வியாழன் அன்று கெய்ரோவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

உலகம்

தூத்துக்குடியில் 2,500 கோடி முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

  • February 1, 2024
  • 0 Comments

உலக அளவில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் முன்னணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில்துறையினரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் தமிழ்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் அரசு […]

இலங்கை

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பாடசாலைகளில் 1 தொடக்கம் 5ஆம் தரம் வரையிலான சகல சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் […]

இலங்கை

யாழில் வீதியில் வைத்து இளைஞன் ஒருவரை கடுமையாக தாக்கிய பொலிஸார்!

  • February 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு செல்லாதமையால் பொலிஸார் வீதியில் தன்னை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

பாகிஸ்தானில் பொதுதேர்தல் சுயேட்சை வேட்பாளர் சுட்டு கொலை; உதவியாளர்கள் நால்வர் காயம்!

  • February 1, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது. அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர். இதில், ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதில், பலனின்றி உயிரிழந்து […]

இலங்கை

திருகோணமலையில் அவதிக்குள்ளான நோயாளர்கள்!

  • February 1, 2024
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் சிற்றூழியர்கள் ஊழியர்கள் மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (01.02) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கை

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான பரிசோதனை நடவடிக்கை

  • February 1, 2024
  • 0 Comments

துக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டார். பொலிஸாரின் அணிவகுப்பு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ பரிசோதனையும் வாகன பரிசோதனையும், அலுவலக கட்டடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது. அத்தோடு பொலிஸாரின் நலன்கள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த […]

உலகம்

லண்டனில் நடந்த கோர சம்பவம்: பொது மக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்

தெற்கு லண்டனின் Clapham பகுதியில் நடந்த அமில வீச்சு சம்பவத்தில் ஒரு தாயாரும் இரு பிள்ளைகளும் உட்பட 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமில வீச்சு நடந்த Clapham பகுதிக்கு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் மீது நடந்த தாக்குதல் இதுவென்றும், அவர்களுக்கு உதவச் சென்ற மூவரும் மூன்று பொலிசாரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபரை போலீசார் தேடி […]