இலங்கை

முல்லைத்தீவில் குடிநீர் கிணற்றுக்குள் நீருடன் மண்ணெண்ணைய்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ‘குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் கடந்த மழை வெள்ளத்தினால் கிணறு வெள்ளநீரில் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக இன்று கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள். இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்து கொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை […]

ஐரோப்பா

பிரிட்டனில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஸ்பானியப் பெண்

ஸ்பானியப் பெண் மலகா பிரிட்டனில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்து பிரிட்டனுக்கு திரும்பிய பின்னர், டிசம்பர் 26 அன்று லூடன் விமான நிலையத்தில் ஒரே இரவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவர் ஸ்பெயினுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார், ஆனால் இங்கிலாந்தில் வாழ்வதற்கான உரிமையைக் காட்டும் உள்துறை அலுவலக ஆவணங்களை எல்லை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த போதிலும் ஸ்பெயினுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார், மேலும் தொழிற்கட்சி எம்பியான அலிஸ்டர் ஸ்ட்ராதெர்ன், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை அலுவலகத்திலிருந்து பதில்களைத் தேடுவதாகக் […]

இலங்கை

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்!

  • January 7, 2024
  • 0 Comments

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான தரவுகளை அவதானிக்கும் போது, ​​ஒரு இலட்சத்திற்கும் குறைவான புதிய பிறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான குறைவு […]

ஐரோப்பா

ரஷ்யாவை சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

‘ரஷ்யாவை கூட சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும்’ என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்வீடனில் நடந்த ஒரு மாநாட்டில் வீடியோ இணைப்பு வழியாக உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போர்க்கள நிலைமை ஒப்பீட்டளவில் நிலையானதாக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

வட அமெரிக்கா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானம் பழுதடைந்தது!

  • January 7, 2024
  • 0 Comments

ஜமைக்காவிற்கு பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக பழுதடைந்துள்ளது. சிக்கலைத் தீர்ப்பதற்காக பழுதுபார்க்கும் குழுவுடன் இரண்டாவது விமானத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கனேடிய ஆயுதப்படைகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தன. ட்ரூடோ தனது குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக கரீபியன் தீவிற்கு சென்றிருந்த நிலையில், இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். கனேடிய பிரதமர் சமீபகாலமாக பயண தாமதங்கள், மற்றும் விபத்துக்களை சந்தித்து வருகிறார். உதாரணமகா அண்மையில் இந்தியாவிற்கு […]

பொழுதுபோக்கு

பப்லுவுடன் மீண்டும் இணைந்த ஷீத்தல்? பார்ட்டியில் பண்ண வேலையை பாருங்க

  • January 7, 2024
  • 0 Comments

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பப்லு என்கிற பிருத்விராஜ். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். இவருக்கும் முதல் மனைவி பீனாவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக சமீபகாலமாகே பேசப்பட்டது. இதனால் சில வாரங்கள் அவர் எங்கேயும், எதுவும் […]

உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கிலான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜப்பான் ராணுவம் உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் நேற்று மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி ஐந்து […]

ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் : 11 பேர் பலி!

  • January 7, 2024
  • 0 Comments

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்புடைய தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இதுபோன்ற தாக்குதல்களின் விளைவுகளை ரஷ்யா அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புனித பண்டங்கள்

ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழையொன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருகோணமலை மறை மாவட்டத்தின் சின்னக்கடை பங்கு என அழைக்கப்படும் புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே இவ் புனித பண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பங்கு குருவானவர் அருட்பணி எஸ்.ஆர்.ஜெயரடணம் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்டுள்ள புனித பண்டங்கள் பத்து ஒரு ஆலயத்தில்,ஒரே இடத்தில் […]

பொழுதுபோக்கு

திருப்தியில்லாத லோகேஷ்… “லியோ” புத்தகத்தையும் வெளியிட்டார்

  • January 7, 2024
  • 0 Comments

விஜய் – லோகேஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒருகட்டத்தில் லோகேஷே லியோ இரண்டாம் பாதி திரைக்கதை சரியாக வரவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், லியோ படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். சென்னையில் தொடங்கிய 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் லியோ திரைக்கதை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், கைதி, மாஸ்டர் படங்களின் திரைக்கதை புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். […]