இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன் கவலை
இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவு இளைஞர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்,அச்சுறுத்தல்களுக்கு […]













