ஆசியா

ஜப்பானில் லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்து: 18 மாணவர்கள் படுகாயம்

  • October 19, 2023
  • 0 Comments

ஜப்பானில் பள்ளி பேருந்து மீது லொறி மோதிய விபத்தில் 18 மாணவர்கள் வரை படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானில் மேற்கு நகரான நராவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக் கொண்டு சென்ற பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. கசிகரா நகரின் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து சென்று கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லொறி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.இதில் பள்ளி குழந்தைகள் 18 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

ஐரோப்பா

இஸ்ரேலைச் சென்றடைந்தார் ரிஷி சுனக்!

  • October 19, 2023
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதமர்  ரிஷி சுனக் இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளதாக கூறினார். அவர் மற்ற பிராந்திய தலைநகரங்களுக்குச் செல்வதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதலின் விளைவாக இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சுனக் தனது இரங்கலைப் பகிர்ந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது,

இலங்கை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கதிர்காமம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் ஒரே இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தெபரவெவ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

மத்திய கிழக்கு

சிரியாவில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!

  • October 19, 2023
  • 0 Comments

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது. சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்டான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ தளம் மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளம் ஆகியவை இவ்வாறு தாக்கப்பட்டன. ஆனால் இந்த தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

உலகம்

பணியாளர்களை குறைக்கும் நோக்கியா நிறுவனம் : வேலையை இழக்கவுள்ள 14 ஆயிரம் பேர்!

  • October 19, 2023
  • 0 Comments

ஃபின்னிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா  வட அமெரிக்காவில் 5G உபகரணங்களுக்கான தேவை குறைவதால்   14,000 வேலைவாய்ப்புகளை  குறைப்பதாக தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோயிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நோக்கியாவும் சேர்ந்துள்ளது. “மூன்றாம் காலாண்டில் மேக்ரோ பொருளாதார சவால்களிலிருந்து எங்கள் வணிகத்தில் அதிகரித்த தாக்கத்தை நாங்கள் கண்டோம்” என்று தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நோக்கியாவின் சேமிப்புத் திட்டம் ஊழியர்களை 72,000 ஆகக் […]

உலகம்

படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர்க்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது

கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் உள்ள Lycée Gambetta உயர்நிலைப் பள்ளியில, 20 வயது பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது Arras நகரின் பேராலயத்தில் நடைபெறும் இறுதித் திருப்பலியில் அதிபர் d’Emmanuel Macron, பிரான்சின் முதல் பெண்மணி Brigitte Macron மற்றும் தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 57 வயது பேராசிரியர் Dominique Bernard அவர்களின் பேராசிரியர் பணியை பாராட்டி […]

இலங்கை

கொழும்பின் பலப் பகுதிகளுக்கு நீர்வெட்டு!

  • October 19, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (21.10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை […]

இலங்கை

கோர பேருந்து விபத்தில் சிக்கி ஒருவர் பலி : 18 பயணிகள் படுகாயம்

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று (அக்டோபர் 19) மதியம் நாரம்மல, தம்பெலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, சம்பவத்தைத் தொடர்ந்து 7 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று […]

ஐரோப்பா

ஜேர்மனியில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : பலர் கைது

ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 65 பொலிஸார் காயமடைந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு பயங்கரவாதத் தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்களைக் கொன்ற போராளிக் குழுவான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலுக்கு பதிலளிக்கும் வகையில் அழைக்கப்பட்ட இத்தகைய போராட்டங்களை அதிகாரிகள் தடை செய்தனர் . Neukölln மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், கலைந்து செல்லும் உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சில போராட்டகாரர்கள் பைரோடெக்னிக்குகளைப் பயன்படுத்தினர், தடுப்புகளுக்கு தீ வைத்தனர் மற்றும் […]

உலகம்

வடகொரியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான ஆதரவுக்கு வடகொரியாவுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளது. உக்ரைனில் தனது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த வடகொரியாவுக்கு ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நன்றி தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனுக்கு மாஸ்கோவின் “முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும்” உறுதியளித்ததாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரேனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டி, உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து சமீபத்திய மாதங்களில் மேற்கத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் […]