இலங்கை

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

வவுனியா, செட்டிகுளம் அடியபுளியங்குளம் பகுதியில், தலைமன்னாரத்திற்குச் சென்று கொண்டிருந்த இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து தலைமன்னார்ம் நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் புகையிரதம் அடியபுளியங்குளம் பகுதியில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட காட்டு யானைகள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பல காட்டு யானைகளும் காயமடைந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தனர். எவ்வாறாயினும், யானை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கணிசமாக உயரும் சாக்லேட் விலை

  • October 27, 2023
  • 0 Comments

அடுத்த வாரம் ஹாலோவீனுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சாக்லேட் விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோகோ விலை இந்த வாரம் 44 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். இதன் தாக்கம் கிறிஸ்மஸ் காலத்தை விட அடுத்த வருடம் ஈஸ்டர் சீசனில் அதிகமாக உணரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றத்தால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோகோ அறுவடை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் சாக்லேட் தொழிலில் ஈடுபட்டுள்ள […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய கொலையாளியை தேடும் பணி தீவிரம்

  • October 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடும் பணியைக் பொலிஸார் விரிவுபடுத்தியுள்ளனர். காடுகள், சிறிய நகரங்கள் என மாநிலத்தின் தெற்குப் பகுதி முழுக்க அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடுகின்றனர். சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமுற்றனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சம்பவம் நடந்த லெவிஸ்டன் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களில் உள்ள கடைகள், பள்ளிகள், மருந்தகங்கள் முதலியன மூடப்பட்டிருக்கின்றன. சம்பவ இடத்திற்குச் செல்லும் சாலைகளைக் […]

இலங்கை

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளின் முன்பாக போராட்டத்தில் இறங்கும் ஆசிரியர் சங்கங்கள்!

  • October 27, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பள்ளி முடிந்ததும், பள்ளிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசியா

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியான் உயிரழப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் தனது 68 ஆவது வயதில் காலமானார். கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அவர் செயற்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்

  • October 27, 2023
  • 0 Comments

புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அதன் தரம் குறையாமல் அப்படியே அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் செயலி சோதித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இல்லாத மக்கள் தற்போது யாருமே இல்லை. குறிப்பாக வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் அனைவரும் கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ் கால் என வெளிநாடுகளில் இருப்பவர்களை கூட வாட்ஸ் ஆப் மூலம் […]

இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

  • October 27, 2023
  • 0 Comments

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் திரு இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு கூறினார். மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் சப்ளையர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.  

ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்

  • October 27, 2023
  • 0 Comments

ஜெமனியின் பொது ஒலிபரப்பான ZDFக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்கு நகரமான Mainz இல் உள்ள பல கட்டிடங்களை ஜேர்மன் பொலிசார் திங்களன்று சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்யியுள்ளனர். மெயின்ஸில் உள்ள ZDF ஸ்டுடியோவிற்கு எதிராக காலை 08:20 மணியளவில் மிரட்டல் வந்ததாக பொலிசார் தெரிவித்தனர். “வளாகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் பிற நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டன என்று பொலிஸார் ஒரு […]

தென் அமெரிக்கா

அமெரிக்காவில் வெங்காயத்தால் வந்த வினை : சால்மோனெல்லா விஷத்தால் 73 பேர் பாதிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சால்மோனெல்லா விஷம் காரணமாக ஏறக்குறைய 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துண்டுகளாக வெட்டப்பட்ட வெங்காயத்தின் மூலமாக குறித்த விஷம் அமெரிக்காவின் 22 மாநிலங்களில் பரவியதாக கூறப்படுவதுடன், மதிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தொற்றுப்பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சால்மோனெல்லா விஷமானது வைத்தியர்களின் தேவையின்றியே குணமடைவதால் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலானோர் இது சம்பந்தமான பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பெரும்பாலம் பச்சையாக உண்ணக்கூடிய […]

மத்திய கிழக்கு

50 பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

ஹமாஸின் இராணுவப் பிரிவு அல்-கஸ்ஸாம் நேற்று (26.10) இஸ்ரேலிய வான்வழித் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியது. “ஜியோனிச குண்டுவீச்சு மற்றும் படுகொலைகளின் விளைவாக காசா பகுதியில் கொல்லப்பட்ட சியோனிஸ்ட் கைதிகளின் எண்ணிக்கை தோராயமாக 50 பேரை எட்டியதாக அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் மதிப்பிடுகிறது” என்று டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ட இருப்பினும், பணயக்கைதிகளின் மரணம் குறித்த கூடுதல் விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.