கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 15 பேர் காயம் – ஆபத்தான நிலையில் 6 பேர்
புறக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 06 பேர் ஆபத்தான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 09.30 மணியளவில் இரண்டாவது குறுக்குத் தெருவில் ஆடை விற்பனை செய்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல கடைகள் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]













