இலங்கை

மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை

மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (26) மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். நல்லதண்ணி, லக்ஷபான மற்றும் வாழைமலை பிரதேசங்களில் வசிக்கும் மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு […]

உலகம்

மாசசூசெட்ஸில் உள்ள வொர்செஸ்டர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • October 28, 2023
  • 0 Comments

மாசசூசெட்ஸில் உள்ள வொர்செஸ்டர் ஸ்டேட் யுனிவர்சிட்டி, விடுதித் தொகுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்குமிடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகம் துரிதமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பான, உட்புற இடங்களில் தஞ்சம் அடையவும், ஜன்னல்களிலிருந்து விலகி இருக்கவும், வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா… கொளுத்திப் போட்ட பிரபலம்

  • October 28, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ, கடந்த 19ம் தேதி வெளியானது. லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படம், இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதேநேரம் படம் எதிர்பார்த்த அளவில் இல்லையென்றும் நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில், லியோ வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார். விஜய்யின் லியோ ஏற்கனவே அறிவித்திருந்த படி அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. விஜய் – லோகேஷ் […]

ஐரோப்பா

ஹங்கேரி பிரதமருக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

  • October 28, 2023
  • 0 Comments

ஹங்கேரி நாட்டின் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்ததற்கு, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஹங்கேரி நாட்டின் பிரதமரான Viktor Orbán, சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யாவுக்கெதிராக தடைகள் விதித்தன. அந்த நிலையிலும், போரை நிறுத்துவதற்காக பலமுறை புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.ஆனால், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் விக்ரம் லேண்டர் உருவாக்கிய மெகா பள்ளம்… தூக்கி வீசப்பட்ட 2.06 டன் துகள்கள்!

  • October 28, 2023
  • 0 Comments

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ள விவரம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. பூமியிலிருந்து விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி அதை பத்திரமாக நிலவில் தரையிறங்க வைத்து, அங்கு ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் நிலவிற்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் […]

ஐரோப்பா

வாக்கு எண்ணுதலில் ஏற்பட்ட தவறு குறித்து வெளிநாட்டு விசாரணை

சுவிட்சர்லாந்தில், வாக்கு எண்ணுதல் தொடர்பில் ஏற்பட்ட தவறு குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பினால் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி வெற்றி பெற்று உள்ளது. எனினும், சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் வாக்கு எண்ணுதலில் தவறிழைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு மாத கால […]

ஐரோப்பா

ரஷ்யாவின் அணுக் கழிவு சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

  • October 28, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள குர்ஸ்க் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக் கழிவு சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில், அதன் சுவர்கள் சேதமடைந்ததாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று (28.10) தெரிவித்துள்ளது. அதன் நடவடிக்கைகள் முழு அளவிலான அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை கிய்வ் அறிந்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.  

இலங்கை

சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகம்

எகிப்திய நெடுஞ்சாலையில் தீயில் எரிந்த வாகனங்கள் : 35 பேர் உயிரிழப்பு!

  • October 28, 2023
  • 0 Comments

எகிப்திய நெடுஞ்சாலையில் இன்று (28.10) காலை பேருந்து ஒரு பல கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எகிப்தில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, அங்கு சாலைகள் பெரும்பாலும் மோசமான  நிலையில் இருப்பது அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. “வாடி அல்-நட்ரூனுக்கு அருகே கெய்ரோ-அலெக்ஸாண்டிரியா பாலைவன சாலையில் மேற்படி […]

ஐரோப்பா

அனைத்து சட்டங்களும் முழு அளவில் பயன்படுத்தப்படும் : பிரித்தானிய காவல்த்துறை எச்சரிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் லண்டனின் பெருநகர காவல்துறை நகரத்தில்  யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு  குற்றங்கள் வியத்தகு அளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் யூத சமூகங்களுக்கு எதிராக இந்த மாதத்தில் 408 யூத எதிர்ப்பு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 28 ஆக இருந்த நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோதலுடன் […]