மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை
மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (26) மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். நல்லதண்ணி, லக்ஷபான மற்றும் வாழைமலை பிரதேசங்களில் வசிக்கும் மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு […]













