இலங்கை

இலங்கையில் ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

  • November 26, 2023
  • 0 Comments

நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான […]

ஐரோப்பா

கீர்ட் வைல்டர்ஸ் வெற்றி: டச்சு காலநிலை கொள்கைகளுக்கான அச்சம்

மூத்த இஸ்லாமிய எதிர்ப்பு ஜனரஞ்சக தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் வெற்றி, டச்சு காலநிலை கொள்கைகளுக்கான அச்சத்தை எழுப்புகிறது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளில் கட்சிக்கு விரோதமான நிலைப்பாடு உள்ளமையே இதற்கு காரணமாகும் காலநிலை ஆர்வலர்களை புதைபடிவ எரிபொருட்களுக்கு கடுமையான மாற்றம் மற்றும் கீர்ட் வைல்டர்ஸ் அரசாங்கத்தை அமைக்க முடிந்தால் காலநிலை கொள்கைகளை திரும்பப்பெறும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் வழங்கிய பாலஸ்தீனியர்கள் இருவரை கொலைசெய்து கம்பத்தில் தொங்கவிட்ட ஆயுதக்குழு

  • November 26, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14,800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை […]

இலங்கை

யாழில் நோயாளர் காவு வண்டியுடன் இரு வாகனங்கள் மோதி விபத்து!

  • November 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (26.11) நோயாளர் காவு வண்டியுடன்,  மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி,  நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி,  நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளைய (27.11) தினம் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்திற்கான பிராசாங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச துறை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாளை நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20000 ரூபாய் கொடுப்பனவை வலியுறுத்தியே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா

சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற கணவன்!

  • November 26, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மனைவியுடனான தகராறில் கத்தரிக்கோலால் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் பிரேம் நகர் காலனியைச் சேர்ந்தவர் ஷாஹித் ஹுசைன்.தையல்காரராக இவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று Fried Chicken வாங்க வேண்டும் என மனைவி நூர் பானோவிடம் (46) பணம் கேட்டுள்ளார். ஆனால், நூர் அவருக்கு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து […]

இலங்கை

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார்?- முன்னால் MP எம்.கே.சிவாஜிலிங்கம் சவால்

  • November 26, 2023
  • 0 Comments

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் திரு ஐங்கரன்நேசன் அவர்கள் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு […]

உலகம்

தொடரும் தீவிர போர் : ஹமாஸ் அமைப்பின் தளபதி மரணம்

காஸா பகுதியில் 4 நாள் போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் இதுவரை 26 இஸ்ரேலிய பொதுமக்களும் 78 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, வடக்கு காசாவின் பொறுப்பாளரான அஹ்மத் அல்-கண்டூர் போரில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது மறுபுறம், மேற்குக் கரையில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கை தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். போரினால் 14 […]

பொழுதுபோக்கு

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்க அல்லு அர்ஜூன் போட்ட மெகா திட்டம்….

  • November 26, 2023
  • 0 Comments

நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிக்களை கவர்ந்துவரும் சூழலில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாஸ் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் […]

இலங்கை

யாழ் – வல்வெட்டித்துறையில் LTTE தலைவர் பிரபாகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது!

  • November 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.