இலங்கை செய்தி

அவுகன புத்தர் சிலைக்கு ஆடை அணிவிக்கப்பட்ட சம்பவம்!! தேரருக்கு எதிராக முறைப்பாடு

  • November 27, 2023
  • 0 Comments

  அவுகன புத்தர் சிலைக்கு அங்கி அணிவித்த சம்பவம் தொடர்பில் ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுகன புத்தர் சிலை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னமாகும். புத்தர் சிலை தொடர்பாக ஏதேனும் பணிகள் நடந்தால் அந்த துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத காரணத்தினால் அவுகன ரஜமஹா விகாரையின் தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிஷாந்தி ஜயசிங்க நெத் […]

இலங்கை செய்தி

ஹரினுக்கும் பவித்ராவுக்கும் மேலும் இரண்டு அமைச்சர் பதவிகள்

  • November 27, 2023
  • 0 Comments

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹரின் பெர்னாண்டோ மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் ஏனைய அமைச்சுப் […]

இலங்கை செய்தி

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

  • November 27, 2023
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் […]

ஆசியா செய்தி

கவிதை எழுதிய தென் கொரிய நபருக்கு 14 மாத சிறைத் தண்டனை

  • November 27, 2023
  • 0 Comments

வடகொரியாவைப் புகழ்ந்து கவிதை எழுதியதற்காக தென் கொரியாவில் 68 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்தது, இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில்வழங்கப்பட்டது. “ஒருமைப்பாட்டின் வழிமுறைகள்” என்ற தலைப்பில் கவிதை 2016 இல் வடக்கின் மாநில ஊடகங்களில் வெளியிடப்பட்டது, மேலும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பெயர் குறிப்பிடுவது போல, கவிதை இரண்டு கொரியாக்களை ஒன்றிணைக்க […]

இலங்கை செய்தி

அகிம்சை வழியில் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி

  • November 27, 2023
  • 0 Comments

மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியா செய்தி

ஜம்மு காஷ்மீரில் இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடிய 7 மாணவர்கள் கைது

  • November 27, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் தோல்வியை கொண்டாடி முழக்கமிட்டதாக, காஷ்மீரை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் ஊபா சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர். ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இந்தியா போராடித் தோற்றது. இந்திய மண்ணில் நடைபெற்ற […]

இலங்கை

யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் மாவீரர் நாள் அஞ்சலி

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

முக்கிய செய்திகள்

உணர்வுடன் கலந்த மாவீரர் நினைவேந்தல்! புகைப்பட பதிவு

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் காரைநகர் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் வல்வெட்டித்துறை- கம்பர்மலை தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் முதல் மாவீரர் சங்கர் அவர்க்ளுக்கு அஞ்சலி  

இலங்கை செய்தி

தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 7 பேர் கொண்ட யாழ் குடும்பம்

  • November 27, 2023
  • 0 Comments

தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிசார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை […]

விளையாட்டு

IPL Update – மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா

  • November 27, 2023
  • 0 Comments

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. […]