இலங்கை

யாழ். திருநெல்வேலியில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி!

  • September 12, 2023
  • 0 Comments

யாழில் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவ ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் இன்று முற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இச் சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

லிபியாவை புரட்டியெடுத்த வெள்ளம் – மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட உடல்கள் !

  • September 12, 2023
  • 0 Comments

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் வலிமையாக தாக்கி அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த Derna நகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் […]

இலங்கை

பசிலுக்கும் – ரணிலுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல்?

  • September 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து ஜனாதிபதிக்கும், பசில் […]

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

  • September 12, 2023
  • 0 Comments

மணிப்பூரில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரின் கங்போப்கி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய குழு வாகனத்தில் வந்து மேற்கு இம்பால்-காங்போப்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லை கிராமங்களான இரங் மற்றும் கரம் பகுதிகளில் […]

உலகம்

வடகொரியாவை தொடர்ந்து சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் ரஷ்யா!

  • September 12, 2023
  • 0 Comments

அபிவிருத்தி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், ரஷ்யாவுடன் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் துணைப் பிரதமர் ஜாங் குவோகிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்புகளை சீனாவின் அரசு செய்தித் தளமான  சின்ஹுவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோது ஜாங் இவ்வாறு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா-ஈரான் இடையே கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஒப்பந்தம்

  • September 12, 2023
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பகை உணர்வு பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் கைது செய்து வைத்துள்ள 5 அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதைப்போல அமெரிக்காவும் கைது செய்து வைத்துள்ள 5 ஈரானிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தென்கொரியாவில் இருந்து சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கத்தாருக்கு பரிமாற்றம் செய்யவும் அமெரிக்கா […]

இலங்கை

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

  • September 12, 2023
  • 0 Comments

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நீலாப்பொல கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த டி.டி.சில்வா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இடத்திற்கு கூலித்தொழிலின் நிமிர்த்தம் சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன குறித்த இடத்திற்கு விஜயம் […]

பொழுதுபோக்கு

சாண்டியின் “கிப்ட்” படத்தின் முதல் தோற்றம்.. இதோ

  • September 12, 2023
  • 0 Comments

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. பிரேமம், நேரம் ,கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர், அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். கிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். அல்போன்ஸ் புத்திரன், இளையராஜா, சாண்டி என ஒரு வித்தியாசமான காம்போவில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கோவை சரளா, சஹானா சர்வேஷ், […]

இலங்கை

இலங்கையில் தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்!

  • September 12, 2023
  • 0 Comments

தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக, பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்வதற்காக, பாடத்துறை அமைச்சர் மூலம் பாராளுமன்றத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு “தேசிய மகளிர் ஆணையம்” என்ற தலைப்பில் ஒரு சுயாதீன ஆணையத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இலங்கை

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

  • September 12, 2023
  • 0 Comments

சுங்க வரி விலக்குக்கு உட்பட்டு புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொடர்புடைய சுங்க வரிகள் இல்லாமல் புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 30,000 […]

error: Content is protected !!