பொழுதுபோக்கு

புஷ்பா 2 வெளியாகும் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது…

  • September 12, 2023
  • 0 Comments

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு புஷ்பா படம் வெளியானது. படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘புஷ்பா -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியின் புதிய லுக்.. பார்க்கவே பயங்கரமா இருக்கு…

  • September 12, 2023
  • 0 Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக், பிரபல ஒளிப்பதிவாளர் நடராஜ், நடிகை மம்தா மோகன் உள்ளட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் […]

இலங்கை

நீதிமன்றில் ஆஜராகுமாறு MP எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை

  • September 12, 2023
  • 0 Comments

நீதிமன்றில் எதிர் வரும் 14ம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரதசேவை!

  • September 12, 2023
  • 0 Comments

புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12.09) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “தொழிற்சங்க பயங்கரவாதம்’ காரணமாக சிக்கலில் […]

ஆசியா

சீனாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை : 07 பேர் பலி!

  • September 12, 2023
  • 0 Comments

சீனாவின் பலப்பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத மழைக்காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைகுய் எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது 08 நாட்களுக்கு முன்பு சீனாவை தாக்கியது. இந்த புயலைத் தொடர்ந்து தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக யூலின் நகரின் பெரும்பாலான பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் இடைவிடாத மழை நிலச்சரிவுக்கும் வழிவகுத்துள்ளது. இதுவரை 115 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.   இதனால் பலப்பகுதிகளில் அவசர எச்சரிக்கை […]

இலங்கை

பிரான்ஸ் அரசுக்கும் – இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் (MEPASL) பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.      

ஆசியா

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு

  • September 12, 2023
  • 0 Comments

தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது. இந்தநிலையில் 2009ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகிறது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளன. அதன்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் டாங்கிகள், […]

இலங்கை

இலங்கையில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு!

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது என வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படுவதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். “இலங்கையில் வருடத்திற்கு சுமார் 12,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். தோராயமாக […]

இலங்கை

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மாயமான 50 கிலோ கஞ்சா

  • September 12, 2023
  • 0 Comments

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே […]

பொழுதுபோக்கு

“மறக்குமா நெஞ்சம்” நடந்தது என்ன? ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்

  • September 12, 2023
  • 0 Comments

இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் […]

error: Content is protected !!