காணி விடுவிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணி கூட்டம்! கலந்து கொள்ளாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் நெறிப்படுத்தலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இன்றைய தினம் சனிக்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலகத்தில் இக்கூட்டம் இடம் பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதி நிதிகள், வன வள திணைக்கள பிரதி நிதிகள்,வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் […]













