செய்தி தமிழ்நாடு

லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து வந்தனர்.

இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது திருச்சி மாவட்டம் நம்பர் 1டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தானது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, ஒரு பெண், 4 ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 6பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார்.

இந்த விபத்தினால் திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தது. காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

திருச்சி  அருகே ஓம்னி வேன் லாரி மோதி விபத்து – 6 போ் இறந்த விபத்தில் முதல் கட்ட தகவல்கள்

இறந்தவர்களின் விவரம் :

1. முருகன் (32)த.பெ. பழனிச்சாமி.

2. தாவணா ஸ்ரீ (10) கோவிந்தன்

3. ஆனந்தாயி(57) க.பெ.பழனிச்சாமி, நெடுங்குளம், எடப்பாடி.

4.முத்துசாமி த/பெ கவிய கவுண்டன்

லாரி ஒட்டுனர்  செந்தில்குமார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோட்டம்

விபத்தில் காயம் ஏற்பட்டவர்கள்

1.சசிகலா(36) த/பெ கோவிந்தன்.

2. சகுந்தலா, (28) க.பெ.கோவிந்தன்.

எல்லமடை தெரு,  நெடுங்குளம் போஸ்ட், எடப்பாடி.ஆம்னி வேனில் வந்தவர்கள் அனைவரும் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content