ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவர்  கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.

12 ஆம் வட்டாரத்தின் rue Prague வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக வீதிக்கு அருகே குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார்.

கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் சில நிமிடங்களிலேயே பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் ஒளிந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் என அறிய முடிகிறது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content