செய்தி தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் மனு

கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தங்கள் சமுதாய மக்களின் வேலைவாய்ப்பு பெற, கல்வி பெற தங்கள் சமுதாய மக்களுக்கு குருமன்ஸ் என்ற பழங்குடி சாதி சான்று வழங்க வேண்டும். தங்கள் குலத்தொழிலான ஆடு வளர்த்தல் தொழில் மேம்பட தமிழ்நாடு அரசு ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை தங்கள் சமுதாய மக்களுக்கே கொடுக்க வேண்டும்.

இயற்கை, மற்றும் விபத்து போன்ற காரணங்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதால், தேவையான காப்பீடு மற்றும் ஆடு வளர்க்கும் தொழிலை காப்பாற்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தர வேண்டும்.

அரசியல் அங்கீகாரம் பெற எங்கள் இனத்திற்குரிய பிரதிநிதித்துவம் பெற இட ஒதுக்கீட்டில் தங்கள் குரும்ப இனத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்கி அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரம் சிதைந்து கொண்டே செல்வதாகவும் எனவே அரசு உடனடியாக தங்கள் நலன் மீது அக்கறை கொண்டு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content