ஆசியா

சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்க எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களின் ஆர்வத்தினால் குடியிருப்புகள் மற்றும் நிலங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் குடியிருப்புகள் மற்றும் நிலங்களை அதிகம் வாங்க ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டினர் குடியிருப்பு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவதற்கு செக் வைக்கும் வகையில் முத்திரைத்தாள் கட்டணத்தை இரண்டு மடங்காக சிங்கப்பூர் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

இதன் மூலம், குடியிருப்புகள் மற்றும் நிலங்களை வெளிநாட்டினர் வாங்குவது குறையும். அதேபோல், சிங்கப்பூரில் பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளின் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்திரைத்தாள் கட்டண உயர்வானது ஏப்ரல் 27- ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் குடிமக்கள் தங்களின் முதல் வீட்டை வாங்கும் போது, எந்த விதமான முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனினும், இரண்டாவது வீட்டை வாங்கும் போது, முத்திரைத்தாள் கட்டணமாக சுமார் 20% செலுத்த வேண்டும். அதேபோல், மூன்றாவது வீட்டை வாங்கும் போது முத்திரைத்தாள் கட்டணமாக 30% செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் முதல் வீட்டை வாங்கினால் 5% முத்திரைத்தாள் கட்டணமும், இரண்டாவது வீட்டை வாங்கினால் 30% முத்திரைத்தாள் கட்டணமும், மூன்றாவது வீட்டை வாங்கினால் 35% முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டினர் வாங்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 60% முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content