உலகம் செய்தி

ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது – ஐ.நா

ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk ) தெரிவித்துள்ளார்.

ஈரானின் அரசு ஊடகங்கள் அண்மையில் 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஈரான் இணைய சேவைகளை ஐந்தாவது நாளாக துண்டித்துள்ள நிலையில் போராட்டங்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனித சுதந்திரப் பறிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இந்த போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி