இலங்கை செய்தி

இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன் எம்பி தெரிவிப்பு

இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான  வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களின் தலைமையில், நாச்சிக்குடாவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வட்டாரக் கிளையின் புதிய தலைவராக அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான திரு.முகமதுமீரா சாய் சலீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கத்துக்கான அடையாளமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இரணைதீவு, இரணைமாதாநகர், நாச்சிக்குடா, நாச்சிக்குடா மத்தி, நாவாந்துறை, ஜேம்ஸ்புரம், கரடிக்குன்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் பூநகரி பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் திரு.முடியப்பு எமிலியாம்பிள்ளை, கட்சியின் இரணைதீவு வட்டார உறுப்பினர்களான திரு.செபமாலை புஸ்பராசா, திருமதி.அனற் ஜெனதாஸ் மற்றும் இக்கூட்டத்துக்கான இணைப்பாளரான திரு.சந்தியோகு அலன்டீலன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content