செய்தி தமிழ்நாடு

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டியுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் தலைமை நிலைய செயளாலர் ஜைனுல் அமிதீன் தலைமை கழக பேச்சாளர் சமீம் கான் திமுக.மவட்ட கிழக்கு பிரதிநிதி குறிஞ்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றாத ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும் உடனடியாக ஆன் லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும்

வரும் 17 தேதி மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப்  17 ம் தேதி முற்றுகை போராட்டத்தோடு சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படுவதாகவும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் மே மாதம் 21ம் தேதி மறைமலை நகர் பகுதியில் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளதாகவும், இதில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

பல ஆண்டுகலாக சிறையில் உள்ள  ( முஸ்லீம்) கைதிகளை தமிழக அரசு துனிச்சலானப்முடிவெடுத்து விடுதலை செய்ய  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

 

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content