“விஜய் வீட்டில் அனுமதிக்க வேண்டும்” சங்கீதா புதிய மனு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த மனுவில், சென்னை நீலாங்கரை வீட்டில் விஜய் தன்னை அனுமதிக்க மறுப்பதாகவும், விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது” என சங்கீதா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அதற்கு மாற்றாக சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





