புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மீண்டும் உயிருடன் வந்த சில்க் சுமிதா… உண்மையில் இவர் யார்?

காந்த கண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல எல்லோரையும் மயக்கும் பார்வை, சொக்க வைக்கும் நளினமான நடனம், 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே அதுபாட்டுக்கு படம் ஓடும் என்றால் அவர் தான் சில்க் சுமிதா.

சில்க் சுமிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்..

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிதுவர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர். முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.

அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.

நடிகர் தியாகராஜன் நடித்து 1984-ல் வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் சில்க் சுமிதாவின் ஆட்டம் இன்றும் பலருக்கு நீங்கா நினைவாக உள்ளது. அதே பாடலின் ரீமிக்சில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் சில்க் சுமிதா தோற்றத்தில் விஷ்ணுபிரியா காந்தி கலக்கியுள்ளார். அதே கண்கள், அதே பார்வை, அதே நளினம் என நிஜத்தில் சில்க் சுமிதாவாகவே மாறியுள்ளார்.

சில்க் வேடத்தில் நடித்தது விஷ்ணுபிரியா காந்தி என்பது மேக்கப் மேன் கிருஷ்ணவேணி பாபு பதிவிட்டபிறகே திரை உலகினருக்கே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு பிரியாகாந்தி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவுகளுக்கு பலரும் ” நீ சில்க் சுமிதா போலவே இருக்கிறாய்” என கருத்துக்களை கூறியிருந்தனர். இதை பார்த்தே திரைப்பட குழு விஷ்ணு பிரியா காந்தியை மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content