இலங்கை செய்தி

ரவி, ஷானியின் அடிப்படை உரிமைகள்மீறல்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் இருவர், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் இருவர், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம்,பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் பிரதம ஆய்வாளர் இந்திக சில்வா மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் மீறியுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காகச் செயல்பட்டதன் மூலம், இவர்கள் மூவரும், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை