ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்பும் அமெரிக்கா

Russian President Vladimir Putin delivers a speech during a meeting of the Federal Security Service (FSB) collegium in Moscow, Russia, February 28, 2023. Sputnik/Gavriil Grigorov/Pool via REUTERS ATTENTION EDITORS – THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தனக்கு மிகவும் கடினமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு தேவையான வெடிமருந்துகள் தற்போது தீர்ந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குவது தொடர்பில் நேச நாடுகளுடன் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேட்டோ அமைப்பின் சிறப்பு மாநாடும் அடுத்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த சர்ச்சைக்குரிய முடிவை எடுத்துள்ளார்.

எனினும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதன்படி, அமெரிக்கா சரியான நேரத்தில் முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி தெரிவித்துள்ளார். எ

னினும், இந்த முடிவை கடுமையாக எதிர்க்கும் ரஷ்யா, இது இழிந்த முடிவு என்று கூறியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி