பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடு “தீவிரம்”!
லண்டனில் யூத மக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தனது தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை “தீவிரம்” என உயர்த்தியுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல்கள் நடப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதை இந்த அறிவிப்பு குறிக்கிறது.
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இம்முடிவானது சமீபத்திய வன்முறைகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரித்தானியா இப்போது மிக உயர்ந்த பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.





